அதிமுகவை புறக்கணித்த மக்கள்-தங்கபாலு
சென்னை: இடைத்தேர்தலில் மக்கள் தங்களை புறக்கணித்த அதிமுகவை புறக்கணித்துள்ளனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. இதை தமிழக காங்கிரஸ் தலைமையகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தேர்தலை புறக்கணித்த ஜெயலலிதாவை மக்கள் அங்கீகரிக்கவில்லை. அவருக்கு ஆதரவு தந்தவர்களையும் மக்கள் புறக்கணித்துவிட்டனர்.
இடைத்தேர்தலில் மக்கள் மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் தந்துள்ளனர். 5 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளோம். வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி அதை அனுமதிக்காது. தனி நபரை விட இந்திய நாட்டின் இறையாண்மை தான் முக்கியமானது.
மத்திய, மாநில அரசுகள் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு எந்த பிரச்சினையும் இல்லாததால் தமிழர்களை திசை திருப்புவதற்காக சில அமைப்புகள் தேவை இல்லாத பிரசாரங்களில் ஈடுபடுகின்றன என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications