மனைவியை சுட முயன்ற போலீஸ்காரர்
நாகர்கோவில்: மத்திய ரிசர்வ் போலீஸில் வேலை பார்க்கும் தனது கணவர் துப்பாக்கியால் மிரட்டி கொல்ல முயன்றதாக நாகர்கோவில் அருகே பெண் ஒருவர் புகார் போலீஸில் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் பெயர் அனிதா. பிஏ வரை படித்துள்ள அவர் மார்த்தாண்டம் அருகே உள்ள கட்டாத்துறை கவியல்லூர் கோணத்துவிலை என்ற பகுதியை சேர்ந்த கோபலன் என்பவரின் மகள்.
இவருக்கும் குட்டகுழி வடக்குவிளையை சேர்ந்த நேசமணி மகன் ரமேஷ்க்கும் கடந்த 03-09-04 அன்று திருமணம் நடந்தது. ரமேஷ் திருணமத்தின்போது காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீசாக வேலை பார்த்து வந்துள்ளார்.
திருமணத்தின் போது 36 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெண் குழித்துறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில்,
எனது கணவர் ரமேஷ் திருமணம் முடிந்த 5வது நாளில் இருந்து குடித்துவிட்டு தகாத வார்த்தை என்னை திட்டுகிறார். கொடுமைப்படுத்துகிறார். இது தினமும் நடக்கிறது.
இந்நிலையில் அவருக்கு ஆந்திர மாநிலத்துக்கு மாற்றல் கிடைத்தது. அவர் என்னை 11-08-06 அன்று அங்கு அழைத்து சென்றார். நான் 7 மாதங்கள் அங்கு அவருடன் தங்கியிருந்தேன்.
அங்கு ஒரு நாள் அவர் என்னை பூட்ஸ் காலால் மிதித்தார். அதில் நான் மயக்கமடைந்தேன். அப்போது நகைகளை எடுத்து சென்று விட்டார்.
மேலும், ஒரு நாள் குடிபோதையில் வந்து தகாத வார்த்தைகளை பேசி துப்பாக்கி முனையால் முதுகில் குத்தி, காயப்படுத்தினார். அதன்பிறகு மண்எண்ணெய்யை எடுத்து வந்து என் மீது ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்றார்.
ஆனால், நான் அலறி சத்தம் போட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானம் பேசி மறுநாள் என்னை ஊருக்கு அனுப்பி வைத்தனர் என்றார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தங்கவள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications