தமிழகத்தை ஜெவிடம் ஒப்படைப்போம்-ஓ.பி சபதம்
தஞ்சாவூர்: தமிழகத்தை மீண்டும், ஜெயலலிதா கையில் ஒப்படைப்போம். அதற்காக நாம் அனைவரும் சபதம் ஏற்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சபதம் மேற்கொண்டார்.
அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டம், தஞ்சையில் நடைபெற்றது.
அதில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் பயணத்தை முடித்து வைத்த பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். அப்படிப்பட்ட மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வந்தவர் அவர்.
இன்றைக்கு தமிழ் வாழ்வதற்கும், வளர்வதற்கும் காரணமாக அவர் விதைத்த விதை தான், இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது. அவரது கொள்கை, கோட்பாடுகளை கருணாநிதி மறந்த காரணத்தால் தான், அ.தி.மு.க - வை எம்.ஜி.ஆர் துவக்கினார்.
அவர் மறைவுக்குப்பின் இயக்கம் அழிந்து போகும் என சிலர் நினைத்த போது, இயக்கத்தை காப்பாற்ற ஜெயலலிதா வந்தார்.
அண்ணா, எம்.ஜி.ஆரின் கொள்கைகள் நாடு உள்ளவரை பறை சாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, 38 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையை ஜெயலலிதா துவங்கியுள்ளார்.
காவிரி பிரச்னையில் காங்கிரஸ் அரசும், தி.மு.க., அரசும் தஞ்சை மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்து விட்டது.
மீண்டும் தமிழகத்தை ஜெயலலிதா கையில் ஒப்படைப்போம். அதற்காக அனைவரும் சபதம் ஏற்போம் என்றார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications