அண்ணா சாலையில் 5 பாலங்கள் கட்ட முடிவு

சென்னை நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறிக் கொண்டுள்ளது. இப்படியே போனால் நடக்கக் கூட டிராபிக் சிக்னல் வைக்க வேண்டிய நிலை எதிர்காலத்தில் வரும் அபாயம் உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு திமுக அரசு ஏராளமான பாலங்களைக் கட்டி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்டு வருகிறது.
அதேசமயம், நகரின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் இதுவரை தீர்ந்தபாடில்லை.
இதை சரி செய்ய, அண்ணாசாலையில் வாலாஜா சாலை, ஸ்பென்சர் சந்திப்பு, எல்டாம்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் ஆகிய இடங்களில் 5 புதிய மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலங்கள் ரூ.600 கோடி செலவில் கட்டப்பட இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக 3 மாத காலத்திற்குள் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து பாலங்களில் வாலாஜா சாலை சந்திப்பு, எல்டாம்ஸ் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் கட்டப்பட உள்ள மேம்பாலங்கள் நீளமானவையாக இருக்கும். அதாவது ஒவ்வொன்றும் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டிருக்கும்.
வாலாஜா சாலை மேம்பாலம் எல்ஐசிக்கு முன்பாக முடியும். எல்டாம்ஸ் சாலை மேம்பாலம், அண்ணாசாலை, செனடாப் சாலை சந்திப்பில் முடியும்.
சிஐடி நகர் மேம்பாலம் அண்ணா சாலையிலும், சிஐடி நகர் முதலாவது மற்றும் 3வது மெயின் ரோட்டையும் இணைக்கும்.
ஸ்பென்சர் சந்திப்பில் கட்டப்பட இருக்கும் மேம்பாலம் 600 மீட்டர் நீளமாக இருக்கும் என்றும் அது அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு முன்பாக முடிவடையும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஐந்து பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெருக்கடி பெருமளவில் குறையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது கட்டிய ஏராளமான பாலங்களால் சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடி பெருமளவில் குறைந்தது. இப்போது அவர் துணை முதல்வராக இருப்பதால் அண்ணா சாலையில் கட்டப்படும் பாலங்களால் சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடி இன்னும் எளிமையாகும் என்று நம்பலாம்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications