For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகாம் அவலம் - ஐ.நா. புகார்களை ஏற்கிறோம்: இலங்கை அமைச்சர்

Google Oneindia Tamil News

UN Logo
கொழும்பு: இடம் பெயர்ந்த தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் நிலவும் நிலை குறித்த ஐ.நா. மனித உரிமைப் பிரிவு செயலாளர் வால்டர் கெலின் தெரிவித்துள்ள புகார்களில் பலவற்றை ஏற்றுக் கொள்கிறோம். அதை சரி செய்ய முயற்சிப்போம் என்று இலங்கை மனித உரிமை அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வால்டர் காலின் கொடுத்துள்ள பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசு முயற்சிக்கும்.

முகாம்களில் துப்புறவு பிரச்சினைகள் குறித்த பல புள்ளிவிவரங்களை அவர் தெரிவித்திருந்தார். அவற்றை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். முகாம்களில் வசிப்போரின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்ககைளையும் அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றை நாங்கள் முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு சரி செய்வோம் என்றார் சமரசிங்கே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X