நடக்காததை ஒளிபரப்பிய ஜியார்ஜியா டிவி - நாடுமுழுவதும் கொந்தளிப்பு!

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான ஜியார்ஜியாவில் ரஷ்யாவுக்கு எதிரான மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான கருத்துக்கள் பரவலாக காணப்படுகின்றன.
ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டங்களை இணைக்கும் புவியமைப்பில் உள்ள ஜியார்ஜியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து வருகிறது.
ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சிலர் ரஷ்யாவுடன் ஜியார்ஜியாவை மீண்டும் இணைத்துக் கொள்வது தொடர்பாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யாவுடன் கைகோர்த்தால், ஜியார்ஜியாவுக்கு என்ன நேரும் என்பதை விளக்குவதற்காக, 'ஜியார்ஜியாவை ரஷ்யப் படைகள் ஆக்கிரமிப்பு செய்து கைப்பற்றிவிட்டன' என நடக்காத நிகழ்வை செய்தியாக 'இமெடி' என்ற தொலைக்காட்சிச் சேனல் வெளியிட்டது.
கடந்த 2008ம் ஆண்டு ரஷ்யப் படைகளுக்கும் ஜியார்ஜிய படைகளுக்கு இடையே நடந்த போரின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை தத்ரூபமாக தற்போது நடப்பது போன்று சித்தரித்து காட்சிகளையும், செய்தியையும் பரபரப்பாக ஒளிபரப்பியது.
அதன் உச்சக்கட்டமாக, ஜியார்ஜியா அதிபர் மிக்கெய்ல் சாகாஷ்வில்லி இறந்து போய்விட்டார் என்றும் அந்த செய்தி அறிக்கை வாசிக்கப்பட்டது.
இதைப் பார்த்து பதைபதைத்துப் போன பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். தலைநகர் திபிலிஸியில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துவது போன்று காட்டப்பட்ட காட்சிகளால் அதிர்ச்சி அடைந்த பலர் தங்கள் உறவினர் மற்றும் அவசர உதவிகள் கோரி நாடு முழுவதும் தொலைபேசி அழைப்புகள் பறந்தன.
பின்னர் அந்த செய்தி வெறும் சித்தரிப்பு தான் என விளக்கப்பட்டதும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பரபரப்பு அடங்கியது.
சனிக்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்ட இந்த களேபரத்தில் பலர் திடீர் மாரடைப்பு வந்து இறந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள தனியார் தொலைக்காட்சி ரஷ்யப் படைகளுடன் கைகோர்த்தால் ஜியார்ஜியாவுக்கு என்ன நேரும் என்பதை தத்ரூபமாக விளக்க முயன்றதாக தெரிவித்துள்ளது.
சினிமா தியேட்டர்களில் சென்சார் சான்றிதழை கடமைக்கு சில வினாடிகள் போடுவதைப் போல, இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் முன்பு கடமைக்காக 'இது ஒரு யூகம்' என்று தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், அதை கவனிக்காத பெரும்பாலான பார்வையாளர்கள் செய்தியை உண்மையென்று நம்பி மனரீதியாக பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
இமெடி என்ற அந்த தனியார் தொலைக்காட்சி அதிபர் மிக்கெல் சாகாஷ்வில்லிக்கு ஆதரவானதாக கருதப்படுவது. அதிபரின் தலையசைப்புடன் தான் இந்த வேலை நடந்திருக்கும் என்று தெரிகிறது.
எனவே, இதுகுறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications