மின் இணைப்பு இல்லை- அரை குறையாக தயாராகியிருக்கும் புதிய சட்டசபை!

புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம் பெரும் பொருட் செலவில் ஏ மற்றும் பி பிளாக் என இரு பிரிவுகளாக கட்டப்பட்டு வருகிறது.
இதில் சட்டசபை மண்டபத்தை தயார் செய்யும் பணிகள் முழுமை அடைந்து விட்டன. இதில்தான் சமீபத்தில் நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
ஆனால், ஊழியர்கள், அதிகாரிகள் அமர்ந்து பணி செய்வதற்கான அறைகள் இன்னும் தயாராகவில்லை.
இதுகுறித்து சட்டசபை ஊழியர்கள் தரப்பில் கூறுகையில்,
சட்டப் பேரவைச் செயலகத்தில் 25க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அதில், ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அறைகள் இருந்தால் தான் பணியாற்ற முடியும். ஆனால், புதிய சட்டப் பேரவையில் ஊழியர்கள், அதிகாரிகளுக்கான அறைகள் தயாராகவில்லை.
பழைய சட்டப் பேரவையில் இருந்து புத்தகங்கள், பீரோக்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றாலும் புதிய பேரவையில் அவற்றை வைப்பதற்கு இடமில்லை என்றனர்.
இதை விட முக்கியமாக சட்டசபைக்கு இன்னும் மின் இணைப்பு தரப்படாமல் உள்ளது. தற்போது ஜெனரேட்டர்களை வைத்துத்தான் மின்சாரம் பெற்று வருகின்றனர்.
இதை வைத்துக் கொண்டு கம்ப்யூட்டர்களை இயக்க வேண்டும் என்றால் அது வேலைக்கு ஆகாது. நீண்ட நேரத்திற்கு ஜெனரேட்டரை வைத்துக் கொண்டு கம்ப்யூட்டர்களை இயக்க முடியாது. அது சரிப்பட்டும் வராது.
தற்போதைய நிலையில் சட்டசபை வளாகத்தை முழுமையாகத் தயார்படுத்த 2 மாதங்களுக்கு மேலாகும் என்று கூறுகிறார்கள்.
அறைகள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. மின் இணைப்பு இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளால் சட்டசபை வளாகம் அரைகுறையாகவே தயாராகியுள்ளது.
நாளை பட்ஜெட் விவாதம் தொடக்கம்:
இதற்கிடையே, புதிய சட்டசபையில் நாளை பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது.
கடந்த 19ம் தேதி நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து 26ம் தேதிக்கு சட்டசபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி நாளை சட்டசபை கூடுகிறது. நாளைய கூட்டம் அரை மணி நேரம் மட்டுமே நடைபெறும் என்று தெரிகிறது. முன்பண மானியக் கோரிக்கையை மட்டும் நிறைவேற்றி விட்டு அவை ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது.
அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழுக் கூடி கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications