மும்பை ரயில் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆனது

மும்பையில் மோட்டார் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனால் வர்த்தக தலைநகரான மும்பை ஸ்தம்பித்துப் போனது. மொத்தம் உள்ள ரயில்களில் 20 சதவீத ரயில்கள் மட்டுமே இயங்கின. 80 சதவீத ரயில்கள் ஓடாமல் போனதால் நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டது.
மும்பை மாநகரின் இயல்பு நிலை பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக கிட்டத்தட்ட 70 லட்சம் பயணிகள் பாதிப்பை சந்தித்தனர்.
மும்பையில் மொத்தம் 1200 மின்சார ரயில் சேவை இயங்கி வருகிறது. ஸ்டிரைக் காரணமாக இன்று வெறும் 250 சேவை மட்டுமே செயல்பட்டது. சர்ச்கேட் –விரார் ரயில் நிலையங்களுக்கு இடையே நீண்ட தொலைவு ரயில் பெட்டிகளை இணைத்து ஓட்டினர்.
ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 10 மோட்டார் ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ரயில் ஸ்டிரைக் காரணமாக மக்களுக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளதால் மகாராஷ்டிர அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வந்தது.
ரயில்வே ஸ்டிரைக் மோசமாகி வந்த்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானின் உத்தரவுப்படி உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், மோட்டார் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உடன்பாடு ஏற்படவே இன்று மாலை ஐந்து மணியளவில் போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மும்பை ரயில் ஊழியர்களின் போராட்டம் இன்று லோக்சபாவில் பெரும் அமளியை ஏற்படுத்தி விட்டது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒட்டு மொத்த எம்.பிக்களும், ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications