For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பி.பி.எஸ்.​ சேர்க்கை: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ​கட்-​ஆஃப் 194.75

By Chakra
Google Oneindia Tamil News

MBBS
சென்னை: இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.​ படிப்​பில் சேருவகற்கு பொதுப் பிரிவு மாண​வர்​கள் சேரு​வ​தற்​கான கட்-​ஆஃப் மதிப்​பெண் 197.5 ஆக இருக்​கும் என்று தெரிகிறது.

பிற்​ப​டுத்​தப்​பட்ட மாண​வர்​க​ளுக்குரிய கட்-​ஆஃப் மதிப்​பெண் 195.75 முதல் 194.75 வரை இருக்​கும் என்று மதிப்​பி​டப்​பட்​டுள்​ளது.​

விழுப்​பு​ரம், ​திரு​வா​ரூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​க​ளில் இந்த ஆண்டே மாண​வர்​க​ளைச் சேர்க்க இந்​திய மருத்​து​வக் கவுன்​சில் அனு​மதி வழங்​கி​யுள்ளது.

அதே போல சென்னை வண்​ட​லூர்-​கேளம்​பாக்​கம் சாலை​யில் புதி​தா​கக் கட்​டப்​பட்​டுள்ள தாகூர் மருத்​து​வக் கல்​லூரி,​​ சென்னை திரு​வேற்​காட்​டில் புதி​தாக கட்​டப்​பட்​டுள்ள ஸ்ரீ முத்​துக்​கு​ம​ரன் மருத்​து​வக் கல்​லூரி ஆகி​ய​வற்​றுக்​கும் இந்​திய மருத்​து​வக் கவுன்​சில் அனு​மதி அளித்​துள்​ளது.​ ​இந்​தக் கல்​லூ​ரி​களி​லி​ருந்து அரசு ஒதுக்​கீட்​டுக்கு தலா 97 ​(65 சத​வீ​தம்)​ எம்.பி.பி.எஸ்.​ இடங்​கள் கிடைக்​கும்.

இதனால் கட்-​ஆஃப் ​மதிப்பெண் 197.75லிருந்து 197.50ஆகக் குறைகிறது.​

சென்​னை​யில் உள்ள 3 அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​கள்,​​ செங்​கல்​பட்டு,​​ வேலூர்,​​ திருச்சி,​​ மதுரை,​​ கோவை,​​ சேலம்,​​ நெல்லை மற்​றும் விழுப்​பு​ரம், ​திரு​வா​ரூர் கல்​லூ​ரி​க​ளை​யும் சேர்த்து தமிழகத்தில் மொத்தமுள்ள 17 அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​க​ளில் மொத்​தம் 1,653 எம்.பி.பி.எஸ்.​ இடங்​கள் உள்​ளன.​

மாணவர் சேர்க்கைக்கு ​விழுப்​பு​ரம்,​​ திரு​வா​ரூர் அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​க​ளுக்கு அனு​மதி அளிக்கப்பட்டுள்ளதால் பொதுப் பிரி​வி​ன​ருக்கான 31 சத​வீத இடங்​கள் 460லிருந்து 512ஆக அதி​க​ரித்​துள்​ளன.

பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்கான 26.5 சத​வீத இடங்​கள் 393லிருந்து 439ஆக அதி​க​ரித்​துள்​ளன.​

பொதுப் பிரி​வி​ன​ருக்கான மொத்த இடங்​கள் 512 ​ஆக அதிகரித்துள்ளதால் அவர்களுக்கான கட்-​ஆஃப் மதிப்​பெண் இந்த ஆண்டு 200க்கு 197.5ஆக இருக்​கும் என மதிப்​பி​டப்​பட்​டுள்​ளது.​

அதே போல கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.​ படிப்​பில் சேர பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்​கான கட்-​ஆஃப் 200க்கு 195.75 ஆக​வும்,

பிற்​ப​டுத்​தப்​பட்ட ​(இஸ்லாமிய)​ வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்​கான கட்-​ஆஃப் 194.75 ஆகவும்,​​ மிக​வும் பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்​கான கட்-​ஆஃப் 193.5 ஆக​வும் இருந்தது.

தாழ்த்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்​கான கட்-​ஆஃப் 189.25 ஆக​வும், தாழ்த்​தப்​பட்ட ​(அருந்​த​தி​யர்)​ வகுப்​பைச் சேர்ந்​தோ​ருக்கு கட்-​ஆஃப் 181.5 ஆக​வும், பழங்​குடி வகுப்​பைச் சேர்ந்​த​வர்​க​ளுக்கு கட்-​ஆஃப் 178.75 ஆக​வும் இருந்​தது.​

பொதுப் பிரி​வி​ன​ருக்கான இடங்​க​ளில் அதிக கட்-​ஆஃப் மதிப்​பெண் எடுத்த பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த பெரும்​பா​லான மாண​வர்​கள் இடம்​பெ​று​வது வழக்​கம்.

மேலும் பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பி​ன​ருக்கு என தனி​யாக 26.5 சத​வீத இடங்​கள்,​​ அதா​வது மொத்​தம் 439 எம்.பி.பி.எஸ்.​ இடங்​கள் உள்​ளன.

இந்த ஆண்டு பிற்​ப​டுத்​தப்​பட்ட மாண​வர்​க​ளுக்குரிய கட்-​ஆஃப் மதிப்​பெண் 195.75 முதல் 194.75 வரை இருக்​கும் என மதிப்​பி​டப்​பட்​டுள்​ளது.​

எம்.பி.பி.எஸ்.​ படிப்​பில் சேர பழைய பிளஸ் 2 மாண​வர்​க​ளும் விண்​ணப்​பிக்​க​லாம் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.

இன்று முதல் விண்​ணப்​ப வினி​யோ​கம்:

இந் நிலையில் எம்.பி.பி.எஸ்,​​ பி.டி.எஸ் ஆகிய படிப்​பு​க​ளில் ​மாண​வர்​க​ளைச் சேர்க்க இன்று முதல் விண்​ணப்​பம்
வழங்​கப்​ப​டு​கி​ன்றன.​

சென்னை மருத்​து​வக் கல்​லூரி,​​ அரசு ஸ்டான்லி மருத்​து​வக் கல்​லூரி,​​ கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ வேலூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ தரு​ம​புரி அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ திருச்சி அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ தஞ்​சா​வூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ சேலம் அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ கோவை அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ மதுரை அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ தேனி அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ நெல்லை அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​தூத்​துக்​குடி அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ கன்​னி​யா​கு​மரி அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ புதி​தா​கத் திறக்​கப்​பட உள்ள விழுப்​பு​ரம்,​​ திரு​வா​ரூர் அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி ஆகிய இடங்க​ளில் விண்​ணப்​பம் வினியோ​கிக்​கப்​ப​டுகின்றன.​

மொத்​தம் 20,000 விண்​ணப்​பங்​கள் அச்​சி​டப்​பட்​டுள்​ளன.​ காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்​ணப்​பம் வழங்​கப்​ப​டும்.​

ரூ.500க்கு டி.டி.​ அளித்து விண்​ணப்​பத்தை பெற்​றுக் கொள்​ள​லாம்.​ ஆதி​தி​ரா​விட,​​ பழங்​குடி வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்கு விண்​ணப்பக் கட்​ட​ணம் கிடை​யாது.​

விண்​ணப்ப வினி​யோ​கம் மே 31ம் தேதி பிற்​ப​கல் 3 மணி வரை நடை​பெ​றும்.​ பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்கள்,​​ சென்னை கீழ்ப்​பாக்​கம் மருத்​து​வக் கல்வி தேர்​வுக் குழு​வுக்கு வந்து சேர கடைசி நாள் மே 31ம் தேதியாகும்.

வரும் ஜூன் 11ம் தேதி ரேங்க் பட்​டி​யல் ​வெளி​யி​டப்​ப​டும்.​ சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் முதல் கட்ட கவுன்ச​லிங் ஜூன் 21ம் தேதி தொடங்​கும்.

தனி​யார் மருத்​து​வக் கல்​லூ​ரிக்கு அனு​மதி ரத்து:

இந் நிலையில் மது​ராந்​த​கம் அருகே கடந்த ஆண்டு தொடங்​கப்​பட்ட தனி​யார் மருத்​து​வக் கல்​லூ​ரி​யில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.​ படிப்​பில் மாண​வர்​க​ளைச் சேர்க்க இந்​திய மருத்​து​வக் கவுன்​சில் அனு​மதி அளிக்​க​வில்லை.​

இந்​தக் கல்​லூ​ரியி​லி​ருந்து கடந்த ஆண்டு அரசு ஒதுக்​கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ்.​ இடங்​கள் கிடைத்​தன.​ இப்​போது இந்த மருத்​து​வக் கல்​லூ​ரி​யில் 100 மாண​வர்​கள் எம்.பி.பி.எஸ்.​ படித்து வரு​கின்​ற​னர்.​

இந் நிலை​யில் இந்தக் கல்லூரியில் உள்ள குறை​பா​டு​க​ளைச் சுட்​டிக் காட்டி நடப்​புக் கல்வியாண்​டில் புதிதாக மாண​வர்​க​ளைச் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இப்​போது எம்.பி.பி.எஸ்.​ படித்து வரும் மாண​வர்​கள் படிப்​பைத் தொடர்​வ​தில் எந்​த​வி​தப் பிரச்ச​னை​யும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X