வகுப்புக்கு செல்லாத அரசு கல்லூரி ஆசிரியர்களை பிடிக்க தனிப்படை: உயர்கல்வி மாமன்றம்
சென்னை: அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பாடம் நடத்தாமல் டிமிக்கி கொடுக்கும் ஆசிரியர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி மாமன்ற துணை தலைவர் ராமசாமி கூறியதாவது:
அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடம் நடத்தாமல், கல்லூரிக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு தன் சொந்த வேலைகளை கவனிக்க சென்று விடுவதாக நீண்ட காலமாக புகார்கள் வருகிறது.
இந்த பிரச்சனையை தீர்க்க உயர் கல்வி மாமன்றம் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தியது.
அப்போது துணை வேந்தர்கள் தெரிவித்த கருத்து:
பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் பதிவேடு ஒழுங்கான முறையில் கண்காணிக்கப்படுவதாகவும், அதனால் கையெழுத்திட்டு விட்டு வெளியில் செல்வது பல்கலைக் கழகங்களில் குறைந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், ஆசிரியர்கள் பல்கலைக் கழகங்களில் இருந்து கொண்டே வகுப்புக்கு செல்லாமல் இருக்கின்றனர் என்று வருத்தம் தெரிவித்தனர். எனவே, இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் அனைத்து அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் திடீர் என்று சோதனை நடத்த தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு வராத, வந்து விட்டு பாடம் நடத்தாத பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை பிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் அதிக கட்டணம் வசூலித்ததை கண்டு பிடித்தது போன்று வகுப்புக்கு சென்று பாடம் நடத்தாத ஆசிரியர்களையும் பிடித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
தற்போதைய நிதி அமைச்சர் க.அன்பழகன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்த போது வீட்டில் இருந்து கல்லூரிக்கு சைக்கிளில் வருவார். காலை 9 மணிக்கு வரும் அவர் மாலை 5 மணி வரை கல்லூரியில் இருந்து பாடம் நடத்தி விட்டு மாணவர்களின் கட்டுரை புத்தகங்களை எல்லாம் திருத்திய பிறகு தான் கட்சி கூட்டங்களுக்கும், சொந்த பணிகளுக்கும் செல்வார். அப்படிப்பட்ட பேராசிரியர் முன்பு இருந்தார்கள்.
ஆனால் தற்போது பல கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த செல்வது கிடையாது என்று அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications