For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாடா குழுமத் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை-இந்திரா நூயி மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

Indra Nooyi
டெல்லி: டாடா குழுமத் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் நிச்சயம் இல்லை. பெப்சி நிறுவனத்தின் தலைவர் பதவியை நான் அனுபவித்து செயலாற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார் பெப்சிகோ நிறுவனத் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான இந்திரா நூயி.

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா ஓய்வு பெறவுள்ளார். அவருக்கென்று வாரிசுகள் யாரும் இல்லை. எனவே புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்கான தேடல் நடந்து வருகிறது. பலருடைய பெயர்களும் இதில் அடிபடுகின்றன.

அந்த வரிசையில் பெப்சி நிறுவனத் தலைவரும், இந்திய அமெரிக்கருமான இந்திரா நூயியின் பெயரும் அடிபடுகிறது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து இந்திரா கூறுகையில், ரத்தன் டாடா மிகப் பெரிய மனிதர், ஆச்சரியகரமான ஒரு மனிதர். அவரது இடத்தை நிரப்ப தகுதியான பலர் இந்தியாவிலேயே உள்ளனர். நான் தற்போது உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றின் தலைவராக செயல்படுகிறேன். எனது இந்தப் பணியை நான் நேசிக்கிறேன், இதில் தொடருகிறேன் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X