தீபாவளி-சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

நவம்பர்5ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களுக்கான வழக்கமான ரயில்கள் அனைத்தும்ஏற்கனவே நிரம்பி விட்டன.
இந்த நிலையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்டிரலில் இருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6.15 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 0601) இயக்கப்படுகிறது. இது மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 5-ந் தேதி மதியம் 2 மணிக்கு சிறப்பு ரயில் (0602) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடிக்கு நவம்பர் மாதம் 6-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் (0613) இயக்கப்படுகிறது. இது மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 7-ந் தேதி மதியம் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (0614) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் (0603) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் மதியம் 2 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் (0604) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து திருநெல்வேலிக்கு எழும்பூர் வழியாக நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (0629) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 9.35 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு எழும்பூர் வழியாக நவம்பர் மாதம் 4-ந் தேதி மதியம் 2.55 மணிக்கு சிறப்பு ரயில் (0630) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
கோவையில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் (0622) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் (0621) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.50 மணிக்கு கோவையை வந்தடையும்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவம்பர் மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் (0642) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 8-ந் தேதி மதியம் 2.40 மணிக்கு சிறப்பு ரயில் (0641) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 5.35 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடிக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் (0619) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு சிறப்பு ரயில் (0620) இயக்கப்படுகிறது. இது மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மயிலாடுதுறை வழியாக நவம்பர் மாதம் 1-ந் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் (0646) இயக்கப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு 4-ந் தேதி இரவு 10.45 மணிக்கு சிறப்பு ரயில் (0645) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 2-ந் தேதி மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் (0635) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் (0636) இயக்கப்படுகிறது. இது மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு மயிலாடுதுறை வழியாக நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 10.45 மணிக்கு சிறப்பு ரயில் (0661) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு விருத்தாசலம் வழியாக நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 4.45 மணிக்கு சிறப்பு ரயில் (0662) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6.55 மணிக்கு சிறப்பு ரயில் (0652) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு நவம்பர் மாதம் 5-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் (0651) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் 8.05 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கின.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications