தீபாவளி-சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

நவம்பர்5ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களுக்கான வழக்கமான ரயில்கள் அனைத்தும்ஏற்கனவே நிரம்பி விட்டன.
இந்த நிலையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்டிரலில் இருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6.15 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 0601) இயக்கப்படுகிறது. இது மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 5-ந் தேதி மதியம் 2 மணிக்கு சிறப்பு ரயில் (0602) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடிக்கு நவம்பர் மாதம் 6-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் (0613) இயக்கப்படுகிறது. இது மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 7-ந் தேதி மதியம் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (0614) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் (0603) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் மதியம் 2 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் (0604) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து திருநெல்வேலிக்கு எழும்பூர் வழியாக நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (0629) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 9.35 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு எழும்பூர் வழியாக நவம்பர் மாதம் 4-ந் தேதி மதியம் 2.55 மணிக்கு சிறப்பு ரயில் (0630) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
கோவையில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் (0622) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் (0621) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.50 மணிக்கு கோவையை வந்தடையும்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவம்பர் மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் (0642) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 8-ந் தேதி மதியம் 2.40 மணிக்கு சிறப்பு ரயில் (0641) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 5.35 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடிக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் (0619) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு சிறப்பு ரயில் (0620) இயக்கப்படுகிறது. இது மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மயிலாடுதுறை வழியாக நவம்பர் மாதம் 1-ந் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் (0646) இயக்கப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு 4-ந் தேதி இரவு 10.45 மணிக்கு சிறப்பு ரயில் (0645) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 2-ந் தேதி மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் (0635) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் (0636) இயக்கப்படுகிறது. இது மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு மயிலாடுதுறை வழியாக நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 10.45 மணிக்கு சிறப்பு ரயில் (0661) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு விருத்தாசலம் வழியாக நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 4.45 மணிக்கு சிறப்பு ரயில் (0662) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6.55 மணிக்கு சிறப்பு ரயில் (0652) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு நவம்பர் மாதம் 5-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் (0651) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் 8.05 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கின.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications