தீபாவளி-சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

நவம்பர்5ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களுக்கான வழக்கமான ரயில்கள் அனைத்தும்ஏற்கனவே நிரம்பி விட்டன.
இந்த நிலையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்டிரலில் இருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6.15 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 0601) இயக்கப்படுகிறது. இது மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 5-ந் தேதி மதியம் 2 மணிக்கு சிறப்பு ரயில் (0602) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடிக்கு நவம்பர் மாதம் 6-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் (0613) இயக்கப்படுகிறது. இது மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 7-ந் தேதி மதியம் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (0614) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் (0603) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் மதியம் 2 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் (0604) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து திருநெல்வேலிக்கு எழும்பூர் வழியாக நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (0629) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 9.35 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு எழும்பூர் வழியாக நவம்பர் மாதம் 4-ந் தேதி மதியம் 2.55 மணிக்கு சிறப்பு ரயில் (0630) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
கோவையில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் (0622) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் (0621) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.50 மணிக்கு கோவையை வந்தடையும்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவம்பர் மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் (0642) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 8-ந் தேதி மதியம் 2.40 மணிக்கு சிறப்பு ரயில் (0641) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 5.35 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடிக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் (0619) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு சிறப்பு ரயில் (0620) இயக்கப்படுகிறது. இது மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மயிலாடுதுறை வழியாக நவம்பர் மாதம் 1-ந் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் (0646) இயக்கப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு 4-ந் தேதி இரவு 10.45 மணிக்கு சிறப்பு ரயில் (0645) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 2-ந் தேதி மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் (0635) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் (0636) இயக்கப்படுகிறது. இது மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு மயிலாடுதுறை வழியாக நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 10.45 மணிக்கு சிறப்பு ரயில் (0661) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு விருத்தாசலம் வழியாக நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 4.45 மணிக்கு சிறப்பு ரயில் (0662) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6.55 மணிக்கு சிறப்பு ரயில் (0652) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு நவம்பர் மாதம் 5-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் (0651) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் 8.05 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கின.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications