கிரிக்கெட் போட்டிக்கு வருவது போல உளவு பார்த்த ஹெட்லி
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஹெட்லி இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
2005ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி டெல்லியில் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் பொட்டி நடந்தது. அந்தப் போட்டியை பிரதமர் மன்மோகன் சிங்குடன் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப்பும் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆட்டத்தைப் பார்க்கவருவது போல தானும், சாஜித் அலி என்பவரும் மற்றும் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் ஹஷிமும் வந்ததாக அமெரிக்க உளவுப் பிரிவினரின் விசாரணையின்போது ஹெட்லி தெரிவித்துள்ளார்.
அந்தப் பயணத்தின்போது இந்தியாவின் தேசிய ராணுவப் பயிற்சிக் கல்லூரி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உளவு பார்த்து, தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களைத் தேர்வு செய்து லஷ்கர் அமைப்பிடம் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.