11 வயதில் எனக்கு இந்தியா மீதான வெறி பிறந்தது.. ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்
மும்பை: 11 வயதில் இருந்தே இந்தியாவை வெறுத்ததாகவும், அங்கு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்த விரும்பியதாகவும் 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் வாக்குமூலம் அளிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தீவிரவாத வழக்கு ஒன்றில் அமெரிக்க சிறையில் உள்ளார். இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்து கொண்டே மும்பை வழக்கில் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகின்றார்.
இன்று அவர் மும்பை உயர் நீதிமன்றம் முன்பு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

பள்ளி
நான் பள்ளியில் படிக்கையில் 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள எனது பள்ளி மீது இந்திய விமானங்கள் குண்டு வீசின. இதில் என் பள்ளி சேதமடைந்தது, அங்கு பணியாற்றியவர்கள் உயிர் இழந்தனர்.(அவர் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை குறிப்பிட்டுள்ளார்)

வெறுப்பு
எனக்கு 11 வயது இருக்கையில் நடந்த அந்த சம்பவத்தில் இருந்து நான் இந்தியாவை வெறுக்கத் துவங்கினேன். என் பள்ளி தாக்கப்பட்டதற்கு பழி வாங்க இந்தியாவில் பெரிய அளவில் சேதம் ஏற்படுத்த அப்பொழுதே முடிவு செய்தேன்.

லஷ்கர் இ தொய்பா
என் கண் முன்பு நடந்த தாக்குதலை பார்த்து இந்தியா மீது ஏற்பட்ட வெறுப்பில் தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பில் சேர்ந்தேன். இந்தியாவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்தவே அந்த அமைப்பில் சேர்ந்தேன்.

மோசமானவன்
வழக்கறிஞர் ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதால் பொறுமையை இழக்க வேண்டாம் என்று நீதிபதி ஹெட்லியிடம் தெரிவித்தார். அதற்கு அவர் கூறுகையில், நான் ஒன்னும் பொறுமையை இழக்கவில்லை. நான் மோசமானவன். அதை நானே ஒப்புக் கொண்டுள்ளேன். மீண்டும் ஒப்புக் கொள்கிறேன் என்றார். ஹெட்லி நாளையும் தொடர்ந்து வாக்குமூலம் அளிக்கிறார். நாளை காலை 7 மணி முதல் அவர் வாக்குமூலம் அளிக்கிறார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications