11 வயதில் எனக்கு இந்தியா மீதான வெறி பிறந்தது.. ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்
மும்பை: 11 வயதில் இருந்தே இந்தியாவை வெறுத்ததாகவும், அங்கு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்த விரும்பியதாகவும் 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் வாக்குமூலம் அளிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தீவிரவாத வழக்கு ஒன்றில் அமெரிக்க சிறையில் உள்ளார். இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்து கொண்டே மும்பை வழக்கில் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகின்றார்.
இன்று அவர் மும்பை உயர் நீதிமன்றம் முன்பு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

பள்ளி
நான் பள்ளியில் படிக்கையில் 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள எனது பள்ளி மீது இந்திய விமானங்கள் குண்டு வீசின. இதில் என் பள்ளி சேதமடைந்தது, அங்கு பணியாற்றியவர்கள் உயிர் இழந்தனர்.(அவர் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை குறிப்பிட்டுள்ளார்)

வெறுப்பு
எனக்கு 11 வயது இருக்கையில் நடந்த அந்த சம்பவத்தில் இருந்து நான் இந்தியாவை வெறுக்கத் துவங்கினேன். என் பள்ளி தாக்கப்பட்டதற்கு பழி வாங்க இந்தியாவில் பெரிய அளவில் சேதம் ஏற்படுத்த அப்பொழுதே முடிவு செய்தேன்.

லஷ்கர் இ தொய்பா
என் கண் முன்பு நடந்த தாக்குதலை பார்த்து இந்தியா மீது ஏற்பட்ட வெறுப்பில் தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பில் சேர்ந்தேன். இந்தியாவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்தவே அந்த அமைப்பில் சேர்ந்தேன்.

மோசமானவன்
வழக்கறிஞர் ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதால் பொறுமையை இழக்க வேண்டாம் என்று நீதிபதி ஹெட்லியிடம் தெரிவித்தார். அதற்கு அவர் கூறுகையில், நான் ஒன்னும் பொறுமையை இழக்கவில்லை. நான் மோசமானவன். அதை நானே ஒப்புக் கொண்டுள்ளேன். மீண்டும் ஒப்புக் கொள்கிறேன் என்றார். ஹெட்லி நாளையும் தொடர்ந்து வாக்குமூலம் அளிக்கிறார். நாளை காலை 7 மணி முதல் அவர் வாக்குமூலம் அளிக்கிறார்.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications