ஸ்பெக்ட்ரம் விவகாரத்தி்ல சரியான திசையில் பயணிக்கிறார் பிரதமர்-சாமி
அகமதாபாத்: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சரியான திசையில் பயணிப்பதாக கூறியுள்ளார் இந்த வழக்கு பெரிதாக முக்கியக் காரணகர்த்தாவான சுப்பிரமணியன் சாமி.
ராசா மீது வழக்கு தொடர பிரதமர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறித்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சாமி. பின்னர் பிரதமர் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலைத் தொடர்நது அப்படியே மங்கி ஸ்டைல் பல்டி அடித்து பிரதமர் மீது எந்த்த தவறும் இல்லை என்று ஜகா வாங்கினார் சாமி. அன்று முதல் தற்போது பிரதமரை பாராட்டியவண்ணம் இருக்கிறார் சாமி.
அகமதாபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தொடர்பாக சரியான திசையில் பயணித்து வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். பிரச்சினை குறித்து பிரதமருக்கு தெளிவாக புரிந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
அவர் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் சரியானதாக இருக்கிறது. ஜனவரி 15ம் தேதி வரை நான் இதை பொறுத்திருந்து பார்க்கவிருக்கிறேன். அதன் பிறகு இதுகுறித்த மேல் நடவடிக்கை குறித்து யோசிப்பேன் என்றார் சாமி.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ரத்தன் டாடாவின் பங்கு குறித்து அவரிடம் கேட்டபோது, ரத்தன் டாடா ஒரு வர்த்தகர். அப்படித்தான் அவர் செயல்பட்டு வருகிறார். அவரை தேவதை போல நினைக்கத் தேவையில்லை.
ஊழலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, ஊழல் செய்து பிடிபடுபவர்களை கடுமையாக தண்டிப்பது மட்டுமே. ஒருவரை கடுமையாக தண்டித்தால் அதற்குப் பின்னால் ஊழல் செய்ய நினைப்பவர்களுக்கு அது நல்ல பாடமாக அமையும்,அவர்களுக்கும் பயம் வரும்.
தற்போது ஊழல்வாதிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications