சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் தரக் கூடாது-திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் கமிஷனர் டாக்டர் எஸ்.ஒய்.குரேஷி, துணை தேர்தல் கமிஷனர் டாக்டர் அலோக் சுக்லாவுடன் வியாழக்கிழமை தமிழகத்திற்கு வந்தார்.
பின்னர் டிரைடென்ட் ஓட்டலில் காலை 10.30 மணியளவில் அவர் அனைத்துக் கட்சி கூட்டத்தி்ல கலந்து கொண்டார்.
வாக்காளர்களுக்குப் பணம் தரக் கூடாது-திமுக:
இக்கூட்டத்தில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்ற பொதுவான கோரிக்கையை முன்வைத்தனர். அதேபோல ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அனைத்துக் கட்சியினராலும் வைக்கப்பட்டது.
திமுக தரப்பில் கூறுகையில், ஒரு வாக்காளர், யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை அவர் அறிந்துகொள்ளும் வகையில், வாக்கு எந்திரத்தில் தனி அமைப்பு இருக்க வேண்டும். தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கும், வாக்கு எண்ணிக்கை நாளுக்கும் இடையே நீண்ட இடைவெளி இல்லாமல், வாக்குப் பதிவு முடிந்த உடனேயே குறுகிய கால அளவில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றனர்.
லத்திகா சரண் இருக்கக் கூடாது-அதிமுக:
அதிமுக பிரதிநிதிகள் கூறுகையில், சட்டசபைத் தேர்தல் சமயத்தில் டிஜிபி பொறுப்பில் லத்திகா சரண் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினர்.
பா.ம.க தரப்பில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை விட்டு விட்டு மீண்டும் பழைய முறையிலான வாக்குச்சீட்டு முறையே தேர்தலில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார் குரேஷி. இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் சரக காவல்துறை துணைத்தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
1.1.2011-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதையடுத்து வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், 2011-ன் இறுதிப்பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடுவதாக இருந்தது. தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் பாதிக்கப்பட்டன. அதனால் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் மாற்றி அமைத்தது. அதன்படி, வாக்காளர் இறுதிப்பட்டியல் ஜனவரி 10-ந் தேதி வெளியிடப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications