மாஜி எம்பி ஜெயசீலன் சொத்து போலி ஆவணம் மூலம் வி்ற்பனை: 2 பேருக்கு வலைவீச்சு
நாசரேத்: நாசரேத்தில் முன்னாள் எம்பியின் ரூ.25 லட்சம் மதிப்புள்ள சொத்து போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் 2 பேரை வலை வீசித் தேடி வருகின்றனர்.
நாசரேத்தைச் சேர்ந்தவர் ஏடிகே ஜெயசீலன். திமுக முன்னாள் எம்பியான இவருக்கு வெள்ளை மடத்தில் 7 ஏக்கர் 18 சென்ட் நிலம் உள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த நிலத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என நாசரேத் பத்திர பதிவு அலுவலகத்தில் வில்லங்கம் பார்த்தார்.
அப்போது அவரது நிலத்தில் 2 ஏக்கர் 38 சென்ட் நிலம் போலி ஆவணம் மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 5 பேருக்கு விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதைத் தொடர்ந்து ஜெயசீலன் நாசரேத் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் ஜெயசீலன் சொத்திற்கு சின்னமதிகூடலைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் போலி ஆவணம் தயாரித்து கேரளாவை சேர்ந்த பிரதீப் என்பவருக்கு பவர் கொடுத்துள்ளார். அவர் 6 பேருக்கு அந்த சொத்தை விற்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பால்ராஜ், பிரதீப் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications