அதிமுக கூட்டணிக் கட்சிகளை முடிவு செய்ய வேண்டியது ஜெ.தான்-வைகோ
சென்னை: அதிமுக கூட்டணியில் எந்தக் கட்சிகள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் முடிவு செய்வார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில்,
இந்த 2011-ம் ஆண்டு புத்தாண்டில் தமிழக அரசியலில் மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்படும். விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, முல்லை பெரியாறு விவகாரம், இலங்கை தமிழர் பிரச்சனை ஆகியவற்றை முன்வைத்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம்.
இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மொத்தத்தில் இவ்வாண்டு தமிழகத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் வகையில் தேர்தல் முடிவுகள் அமையும்.
காங்கிரஸ் கட்சியை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எதிர்க்கவில்லையே என்று கேட்கிறீர்கள். சமீபத்திய அவரது அறிக்கைகள் காங்கிரசை எதிர்த்தே அமைந்துள்ளன. காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளும் என்று அவர் அறிவிக்கவில்லை.
அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து ஜெயலலிதாதான் முடிவு செய்வார். எங்களைப் பொறுத்தவரை மதிமுகவுக்கும், அதிமுகவுக்கும் உறவு சுமூகமாக உள்ளது. எங்கள் கூட்டணி தொடரும் என்றார் வைகோ.
காங்கிரஸுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற பேச்சும் ஒரு பக்கம் இருந்து வருகிறது. மறுபுறம் வைகோவுக்குக் கடுமையான போட்டியாளராக கருதப்படும் விஜயகாந்த்தும் கூட்டணிக்கு வரவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பாமகவும் கூட்டணிக்கு வரும் என்று தெரிகிறது. தேமுதிகவும், பாமகவும் கூட்டணிக்கு வந்தால், மதிமுகவுக்கு வழங்கப்படும் சீட்களின் எண்ணிக்கை வெகுவாக குறையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications