நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் அண்ணா சிலை சேதம்-முதியவர் கைது
நெல்லை: நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருக்கும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலையை சேதப்படுத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை உள்ளது. அண்ணாதுரை புத்தகம் படிப்பது போன்று தோற்றம் கொண்ட இந்தி சிலை சிமிண்ட், மண், செங்கலால் அமைக்கப்பட்டது. நேற்று மதியம் முதியவர் ஒருவர் ஆவேசத்துடன் கடப்பாரை கம்பியால் சிலையின் வலது கை, கால் மூட்டுகளை உடைத்து சேதப்படுத்தினார். சாலையில் சென்ற மக்கள், மாநகராட்சி ஊழியர்கள் முதியவரை பிடித்து நெல்லை ஜங்ஷன் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சிவசுப்பு விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் சேரன்மகாதேவி இரட்டைபத்து தெருவை சேர்ந்த சிவபெருமாள் என்றும், இடைகால் புதூர் முத்தாரம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார் என்றும் தெரிய வந்தது. வீட்டிலே சிவபெருமாள் தனியாக வசித்து வருகிறார்.
திமுகவை சேர்ந்த தன்னை அம்பாசமுத்திரத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும், தனக்கு நஷ்டஈடு எதுவும் கிடைக்காததால் சிலையை உடைத்து சேதப்படுத்தியதாகவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்போவதாகவும் முன்னுக்கு பின் முரணாக சிவபெருமாள் போலீசிடம் கூறினார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications