தமிழகத்தில் இதுவரை ரூ. 17 கோடி மதிப்பிலான பணம், இலவச பொருட்கள் பறிமுதல்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 17 கோடி மதிப்புள்ள பொருட்களும், கணக்கில் காட்டப்படாத ரொக்கமும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்று தேர்தல் ஆணையம் ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டது. தமிழகம் எங்கும் போலீசாருடன் சேர்ந்து தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை மாநிலம் முழுவதும் ரூ. 9 கோடி கணக்கில் காட்டப்படாத பணமும், ரூ. 8 கோடி மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவையெல்லாம் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வாக்காளர்களுக்கு இலவசமாக கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டவை.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது,
இது வரை ரூ. 8 கோடி மதிப்பிலான சேலை, வேட்டிகளும், ரூ. 9 கோடி கணக்கில் காட்டப்படாத ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது வரை தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் 35 ஆயிரத்து 240 புகார்கள் பதிவு செய்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டைக் கேட்டு சுமார் 10 லட்சம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவை ஆய்வு செய்த பிறகு தகுதியானவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
தேர்தல் செலவுக் கணக்குகளை கண்காணிப்பதற்கு என்று பிற மாநிலங்களில் இருந்து 58 பேர் வந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
இம்முறை செய்தித் தாளில் பணப் பட்டுவாடா நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், நடு இரவில் பணப் பட்டுவாடா செய்யும் அரசியல் கட்சிகளை கையும், களவுமாகப் பிடிக்க தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications