கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு

பண்ருட்டியில் இன்று பிற்பகல் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்துப் பேசினார் விஜயகாந்த். மிகப் பெரிய அளவில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில், விஜயகாந்த் பேசுகையில் கூறியதாவது:
என்னைப் பற்றி விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின். உண்மையில், இந்த நாட்டைப் பிடித்த சனியன்தான் உங்க அப்பா. உங்க அப்பாதான் இந்த நாட்டின் சனியன். நீங்கள் இந்த நாட்டைப் பிடித்த பிணி.
எங்களது கூட்டணியை எண்ணெயும், தண்ணீரும் போல என்கிறார்கள். உண்மையில் உங்களது கூட்டணிதான் எண்ணெயும், தண்ணீரும் போல. எங்களது கூட்டணி, தேனும் பாலும் போல. எங்களது கூட்டணி மக்கள் கூட்டணி.
உங்களை சமூக நீதி காத்த கூட்டணி என்கிறீர்கள். ஆனால் உண்மையில் அது சமுதாய விரோத கூட்டணி. பாமக தலைவர் சொன்னாரே, கலைஞர் அலை வீசுகிறது என்று. ஆனால் அனல் காற்றுதான் வீசுகிறது.
என்னைக் காடுவெட்டி குரு பயமுறுத்துகிறார். எனக்குப் பயமெல்லாம் கிடையாது. உங்க தலைவர்தானே அன்று கலைஞர் ஆட்சிக்கு சைபர் மார்க் போட்டார். கருணாநிதி ஆட்சிக்கு அதிக சைபர்களைப் போட்டவர் ராமதாஸ்தான். இன்று அந்த சைபர் கூட்டணியில் போய்ச் சேர்ந்திருக்கிறார்.
தமிழினத் தலைவர் என்று கூறிக் கொள்கிறாரே கலைஞர், உண்மையில் அவர் தமிழினத்தை அழித்த தலைவர். அவரால் ஒரு இனமே அழிந்து போய் விட்டது. தமிழ் மக்களுக்காகப் போராடுவேன் என்று கூறுகிறார் கருணாநிதி, அவரை இலங்கைப் படையிடம் சிக்கி உயிரிழந்த 550 மீனவர்களின் ஆவி கூட மன்னிக்காது.
கருணாநிதி ஆட்சி சாதனை அல்ல, பெரும் வேதனைதான். மக்கள் அவர்களுக்கு தீர்ப்பளிக்கப் போகிறார்கள். நிச்சயம் அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.
டெல்லியில் இன்று அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருக்கிறார். எதற்காக, ஊழலை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்பதற்காக. ஆனால் கலைஞரோ, அண்ணாவின் பெயரைச் சொல்லி நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
மே 13க்குப் பிறகு தெரியும், மானாடுதா, மயிலாடுதா என்பது. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். கலைஞர் வீடா, தமி்ழ்நாடா என்பதை வாக்களிக்கப் போகும் முன்பு நினைத்துப் பார்த்து முடிவு செய்து கொண்டு வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications