தேர்தலில் மக்கள் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்-ஜெயலலிதா

அம்பேத்காரின் 121வது பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் பற்றி உங்களது கருத்து என்ன?
பதில்: தேர்தல் கமிஷனின் சிறப்பான நடவடிக்கைகளால் தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில சம்பவங்களை தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். திமுக ஆட்சியின் மீது பொதுமக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். வாக்குகள் மூலமாக அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர்.
கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தேர்தலில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும்?
பதில்: 2ஜி ஸ்பெக்ட்ரம் மட்டும் அல்ல பல்வேறு ஊழல்களையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர்.
கேள்வி: தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?
பதில்: மே 13ம் வரை காத்திருங்கள்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் 3 கமிஷனர்களில் ஒருவரான ஆந்திரா கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.எஸ்.சம்பத் என்பவர் ஜெயலலிதாவுக்கு சொந்தக்காரர் என்றும், இவர் மூலமாகத் தான் தேர்தல் ஆணையத்தை தனக்கு சாதமாக ஜெயலலிதா வளைத்தார் என்றும் வார இதழ் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications