பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் அதிகாரிகள்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
ஈரோடு: பெண் போலீஸ் ஒருவரை உயர் அதிகாரிகள் பாலியல் சித்தரவதை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு காவல் நிலையத்தில் பெண் போலீசாக இருப்பவர் மாலதி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
நான் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றேன். நான் பணியாற்றி வரும் மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் எனக்கு பல்வேறு விதமான செக்ஸ் தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். வெளியே சொல்ல முடியாத அளவுக்கு நான் பாலியல் சித்தரவதைகளுக்கு ஆளாகி உள்ளேன். நீதிபதிகள் கேட்டுக் கொண்டால் இதை தனியாக சொல்லத் தயாராக உள்ளேன்.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் செக்ஸ் தொல்லை தொடர்பாக 1997-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் பெண்கள் பணி புரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த உத்தரவு வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் பெண்கள் பணிபுரியும் காவல் நிலையங்களிலோ, போலீஸ் சரகத்திலோ, மாவட்ட போலீஸ் அலுவலகத்திலோ விசாரணைக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை.
எனவே, பெண் காவலர்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக குழு அமைக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது பற்றி விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண் போலீஸ் ஒருவரே பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications