கொங்கு மண்டலத்தை ஆட்டிப்படைக்கும் சாயப்பட்டறை பிரச்சினையைத் தீர்க்க ஜெ. அதிரடி நடவடிக்கை

சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது தான் மக்களுக்கும், தொழில்துறையினருக்கும் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் துரித கதியில் அமைந்துள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளில் ஏழை நிறைவேற்ற முதல் கட்டமாக உத்தரவிட்ட ஜெயலலிதா தற்போது திருப்பூர், ஈரோடு, கரூரை ஆட்டிப்படைத்து வரும் சாயப்பட்டறை கழிவு நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திருப்பூர் சாயப்பட்டறைகள் பிரச்சினை குறித்து தீர்வு காண ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நிதித்துறை அமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், திருப்பூர் சாயப்பட்டறைகள் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காணும் பொருட்டு தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தினார்.
முதல்கட்டமாக சாயத்தொழில் அதிபர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும், அதைப்போலவே பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், அதன்மூலம் இந்த பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பதவியில் அமர்ந்த நான்காவது நாளிலேயே தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றான சாயப்பட்டறைக் கழிவு நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜெயலலிதா களம் இறங்கியிருப்பதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.
கழிவு நீர்ப் பிரச்சினை காரணமாக திருப்பூர், ஈரோடு, கரூரில் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு அவை மூடப்பட்டுள்ளன. அவற்றுக்கான மின் இணைப்பையும் தமிழக அரசு கடந்த ஆட்சிக்காலத்தில் துண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications