கொங்கு மண்டலத்தை ஆட்டிப்படைக்கும் சாயப்பட்டறை பிரச்சினையைத் தீர்க்க ஜெ. அதிரடி நடவடிக்கை

சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது தான் மக்களுக்கும், தொழில்துறையினருக்கும் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் துரித கதியில் அமைந்துள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளில் ஏழை நிறைவேற்ற முதல் கட்டமாக உத்தரவிட்ட ஜெயலலிதா தற்போது திருப்பூர், ஈரோடு, கரூரை ஆட்டிப்படைத்து வரும் சாயப்பட்டறை கழிவு நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திருப்பூர் சாயப்பட்டறைகள் பிரச்சினை குறித்து தீர்வு காண ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நிதித்துறை அமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், திருப்பூர் சாயப்பட்டறைகள் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காணும் பொருட்டு தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தினார்.
முதல்கட்டமாக சாயத்தொழில் அதிபர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும், அதைப்போலவே பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், அதன்மூலம் இந்த பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பதவியில் அமர்ந்த நான்காவது நாளிலேயே தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றான சாயப்பட்டறைக் கழிவு நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜெயலலிதா களம் இறங்கியிருப்பதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.
கழிவு நீர்ப் பிரச்சினை காரணமாக திருப்பூர், ஈரோடு, கரூரில் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு அவை மூடப்பட்டுள்ளன. அவற்றுக்கான மின் இணைப்பையும் தமிழக அரசு கடந்த ஆட்சிக்காலத்தில் துண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications