அஞ்சுகிராமம் அதிமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை
அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் பஞ்சாயத்து துணை லைவர் ஏசு அமலதாசன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.
அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் ஜேமஸ்டவுன், பிச்சை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் ஏசு அமலதாசன் (40). அகஸ்தீஸ்வரம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணை செயலாளராகவும், அஞ்சுகிராமம் பஞ்சாயத்து துணை தலைவராகவும் இருந்தார். அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
நேற்றிரவு ஜேம்ஸ்டவுண் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே உள்ள ரோட்டில் அமலதாசன் இரண்டு கைகளும் துண்டாக்கப்பட்டு, உடலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட அமலதாசனுக்கு அன்னாள் ரெஜி என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர் அஞ்சுகிராமம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்திருந்தார். அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர்.
கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு அவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்ய முயன்றது. ஆனால் அதில் இருந்து தப்பிவிட்டார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அரசியல் பகைவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலித் பஞ்.தலைவிக்கு சரமாரிவெட்டு-உயிர் ஊசல்:
நெல்லை மாவட்டம் தாழையூத்து கிராம பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணி தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவரது கணவர் பொய்யாமணி, மின்சார வாரியத்தில் பணியாற்றுகிறார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக பஞ்சாயத்தில் தலைவராக இருந்தாலும் பல்வேறு தரப்பினரின் அரசியல், ஜாதி ரீதியாகஅடக்குமுறைகளை கிருஷ்ணவேணி சந்தித்தார். அவரை அந்த பொறுப்பில் இருக்கவிடாமல். போராட்டங்களையும் நடத்தினர்.
இந் நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு ஆட்டோவில் சென்றார். வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்தஅவர் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உயிர் ஊசலாடுகிறது. சம்பவம் குறித்துசங்கர்நகர் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications