கங்கையைக் காக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சாமியார் விஷம் வைத்துக் கொலை?

நிகமானந்த்தின் ரத்த மாதிரியை ஆய்வு செய்த ஆய்வகம் தயாரித்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நிகமானந்தின் மரணத்திற்குக் காரணம் பூச்சிக் கொல்லி மருந்து என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த லால் பாத் லேப்ஸ் என்ற ஆய்வகத்தின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், நிகமானந்த்தின் ரத்தத்தில் அதிக அளவில் டாக்ஸின் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு ஆர்கனோபாஸ்பேட் என்ற பூச்சிக் கொல்லி மருந்தே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அது கூறுகிறது.
மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுதான் அவரது உடலில் இந்த விஷம் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இருப்பினும் நிகமானந்த் உடல் சத்துக் குறைவு மற்றும் செப்டிசீமியா காரணமாகவே உயிரிழந்ததாக நிகமானந்த்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.
ஏப்ரல் 27ம் தேதி ஹரித்வாரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நிகமானந்த். பின்னர் மே 4ம் தேதி அவரை ஹிமாலயன் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு மாற்றினர். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை, டெல்லி லால் பாத் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். அந்த ஆய்வில்தான் இது தெரிய வந்துள்ளது.
கங்கைக் கரைப் பகுதியில், ரிஷிகேஷத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மணல் அள்ளத் தடை விதிக்கக் கோரியும், கங்கையை அழிவிலிருந்து காக்கக் கோரியும் உண்ணாவிரதம் இருந்து வந்தார் நிகமானந்த். பாபா ராம்தேவ் தனது உண்ணாவிரதத்தை முடித்த மறு நாள் அவர் உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.
நிகமானந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications