அசன் அலி பாஸ்போர்ட்: 1 வாரத்தில் ராஜினாமா செய்ய புதுச்சேரி கவர்னருக்கு மத்திய அரசு உத்தரவு

புனேவை சேர்ந்த குதிரைப் பண்ணை உரிமையாளரான அசன் அலி ரூ.45,000 கோடி அளவுக்கு ஹவாலா மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது தொடர்புகள் குறித்து அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின்போது இவருக்கு 1997ம் ஆண்டு பாஸ்போர்ட் வழங்க இக்பால் சிங் பரிந்துரை கடிதம் தந்தது தெரியவந்தது. அப்போது சிங் ராஜ்யசபா எம்பியாக இருந்தார்.
அசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு வெளிவிவகாரத் துறைக்கு சிங் சிபாரிசு கடிதம் கொடுத்திருந்தார். அதேபோல அசன் அலியின் நண்பர் காசிநாத் தபுரியா, அவரது மனைவி ஆகியோருக்கும் பாஸ்போர்ட் வழங்கும்படி சிபாரிசு கடிதம் கொடுத்திருந்தார் சிங்.
நிழல் உலகத் தொடர்புகள், கறுப்புப் பண மோசடி, ஹவாலா பண பரிமாற்றம் என்று போலீஸ் ரெக்கார்டில் கறுப்புப் பட்டியலில் இருந்த அசன் அலிக்கு இக்பால் சிங்கின் பரிந்துரையால் பாஸ்போர்ட் கிடைத்தது. இதற்காக இக்பால் சிங்குக்கு அசன் அலி தரப்பிலிருந்து ஏராளமான பணமோ அல்லது வேறு வகையான உதவிகளோ கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 3 முறை புதுச்சேரி வந்து கவர்னர் மாளிகையில் வைத்து இக்பால் சிங்கிடம் விசாரணை நடத்திச் சென்றனர். இதையடுத்து சிங், டெல்லி சென்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித்து தனது தரப்பு நியாயத்தை விளக்கினார்.
ஆனால், கவர்னர் இக்பால்சிங் பதவி விலகக் கோரி புதுவையில் பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தின. முழு டைப்பும் நடைபெற்றது. ஆனாலும் தொடர்ந்து பதவியில் தொங்கிக் கொண்டுள்ளார் சிங்.
இந் நிலையில் கடந்த 2ம் தேதி அவரை டெல்லிக்கு அழைத்த உள்துறை அமைச்சக அதிகாரிகள், அவரை ஒரு வாரத்துக்குள் ராஜினாமா செய்யுமாறு கூறிவிட்டதாகத் தெரிகிறது.
எனவே இக்பால் சிங் எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பதவி விலகினால், தமிழக கவர்னர் பர்னாலா புதுவை மாநில பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
இக்பால்சிங் 2009ம் ஆண்டு ஜூலை மாதம் புதுவை கவர்னராக பதவி ஏற்றார். அவருடைய 3 ஆண்டு பதவிக் காலம் விரைவில் முடிய இருக்கிறது. அதை ஒட்டி அவராகவே பதவி விலகுவது போல காட்டி, இந்த விவகாரம் பெரிய அளவில் வெடிக்காமல் மூடி மறைக்க மத்திய அரசு முயல்வதாகத் தெரிகிறது.
இதனால் தான் கடந்த 3 மாதங்களாக அவரை பதவியில் நீடிக்க விட்டதாகவும் தெரிகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications