சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி அதிகரிப்பு: மக்களே உஷார்
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொள்ளை நகரமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்க விலை உயர்வைப் பார்த்தால் இனி ஏழை, எளிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகிவிடும் போல் உள்ளது. இந்நிலையில் சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் தனியாக நடந்து சென்ற யூசுப் அகமது என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, இரும்புக் கம்பியால் அவரது தலையில் தாக்கியுள்ளனர். அதற்குள் அந்த வழியாக போலீசார் ரோந்து வரவே அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று ஒருவரைப் பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் வியாசர்பாடி எஸ்.எம். நகரைச் சேர்ந்த கார்த்திக்(24) என்று தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே கொள்ளை வழக்குகள் உள்ளன. தப்பியோடிய கார்த்திக்கின் தம்பி முரளியை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் சென்னை அசோக் நகரில் மணிமொழி என்பவரிடம் இருந்து 4 பவுன் தங்க நகையை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். மேலும் யானைக்கவுனியில் செல்போன் ரீசார்ஜ் கடை உரிமையாளர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செயின், மோதிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
பஞ்சு அருணாச்சலம் மகளிடம் சங்கிலி பறிப்பு
பிரபல சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் சித்ரா விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு அருகே நடந்து செல்கையில் வாலிபர் ஒருவர் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் இருந்த 8 பவுன் செயினை பறித்துச் சென்றார்.
தனியாக செல்பவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டுவது, பெண் வேடமிட்டுச் சென்று கொள்ளையடிப்பது, முகவரி கேட்பது போல நகைகளைப் பறித்துச் செல்கின்றனர். வழிப்பறி சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
மக்கள் வெளியே தெரியாதபடி நகைகள் அணிய வேண்டும். திருட்டு நகைகள் என்று தெரிந்தும் அதை வாங்கும் அடகுக் கடைக்காரர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications