ஒன்றரை ஆண்டுகளில் 16000க்கு கீழே போன சென்செக்ஸ்!
மும்பை: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி கண்டது இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸ்.
காலையில் 16,155.55 புள்ளிகளில் தொடங்கியது சென்செக்ஸ். வர்த்தக நேர முடிவில் 297.50புள்ளிகள் குறைந்து 15848.83 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசிய பங்கு சந்தையான நிப்டி 91.80 புள்ளிகள் குறைந்து 4747.80 புள்ளிகளாக உள்ளது.
ஹீரோமோட்டோ கார்ப், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஏபிபி, எச்பிசிஎல், இன்ஃபோசிஸ், கெடிலா ஹெல்த், டாபர் இந்தியா, ஆரக்கிள் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் மட்டும் ஓரளவு உயர்ந்து விற்பனையாகின.
டாடா ஸ்டீல், கோல் இந்தியா, எஸ்பிஐ, டாடா பவர், மாருதி சுஸுகி, விப்ரோ, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஜிந்தால் ஸ்டீல், சிப்லா, பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல், டிசிஎஸ், இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தின.
இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் இறங்கு முகத்தில்தான் வர்த்தகம் நடந்தது.