இமாம் அலி கூட்டாளிகள் உருவாக்கிய அல் முன்தாமீன் படை- ஜெ.வுக்கும் குறியா?
மதுரை: இமாம் அலியை சுட்டுக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பதற்காக 'அல் முன்தாமீன் படை' என்ற தனிப்படை உருவாக்கப்பட்டு ரகசியமாக அது செயல்பட்டு வருவதாகவும் அந்தப் படையினர்தான் தற்போதைய அத்வானி குண்டுவைப்பு விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் ஒரு தகவல் கூறப்படுகிறது. மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இந்தப் படையினர் குறி வைத்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த ஒரு மனுவில், பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே பெங்களூரில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில் தான் அங்கு செல்ல இயலாத நிலை உள்ளதாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
மேலும் தனது மனுவில் இமாம் அலியைக் கொன்றவர்களைப் பழிதீர்ப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் அல் முன் தாமீன் படை என்ற ரகசிய அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருவதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கைதாகியுள்ள பலரும் இமாம் அலியின் ஆதரவாளர்கள் என்பதால், இந்தப் படையைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 2002ம் ஆண்டு பெங்களூரில் பதுங்கியிருந்த இமாம் அலியை தமிழக போலீஸ் படையினர் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த அல் முஜாஹிதீன் என்ற அமைப்புக்கும், தற்போது கைதாகியுள்ளவர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் ஒரு போலீஸ் தகவல் தெரிவிக்கிறது. பிலால் மாலிக் இந்த படையுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இவர் மதுரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி காளிதாஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அப்போது இவருக்கு 17 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதானவர்களுக்கும், எந்தெந்த அமைப்புகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பெரிய அளவிலான சதித் திட்டமாகவும், பெரிய அளவில் ரகசிய அமைப்பாக இவர்கள் இயங்கி வந்ததும் தெரிய வந்துள்ளதால், ஏற்கனவே மதுரையில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரித்த முன்னாள், இன்னாள் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு பெரிய அளவில் மதுரை போலீஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications