வன்னியர் சங்கம் போல தனி இயக்கம் தொடங்க வேல்முருகன் திட்டம்- ஆதரவாளர்களுடன் ஆலோசனை!
கடலூர்: பாமகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் தனிக் கட்சி அல்லது தனி இயக்கம் தொடங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விசுவாசமாக இருந்தவர் வேல்முருகன்.இதனால் இவருக்கு கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வரை வேகமாக ஓடி வந்தது. ஆனால் 2ம் நிலை தலைவர்கள் இவரது வளர்ச்சியைப் பார்த்து பொறுக்க முடியாமல் வேல்முருகனை சாய்க்க காலம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கடலூரில் இவர் பேசிய பேச்சை காரணமாக வைத்து கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.
இதனால் கொதிப்படைந்த வேல்முருகனின் ஆதரவாளர்கள், கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கட்சிக் கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்த்தனர். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு உள்ளிட்டோரின் படங்களையும் உடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று கடலூரில் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தைக்கூட்டி ஆலோசனை நடத்தினார் வேல்முருகன். இதில் பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாள்களிடம் வேல்முருகன் பேசுகையில்,
பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேரால் நான் தேர்ந்து எடுக்கப்பட்டு இணைப் பொதுச் செயலாளரானேன். கட்சியின் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழு என்னை நீக்க அதிகாரம் இல்லை. பொதுக்குழுவைக் கூட்டித்தான் முடிவு எடுக்க வேண்டும். உயர்மட்டக் குழுவில் 14 பேர்தான் உண்மையான உறுப்பினர்கள். 10 பேர் போலியானவர்கள்.
நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன். கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசுவேன். அவர்களின் கருத்தை அறிந்த பின்னரே தனிக்கட்சியா, தனி இயக்கமா என்பதை முடிவு செய்வேன்.
நான் நீக்கம் செய்யப்பட்டற்கு கட்சித் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எனது தரப்பு வாதத்தை எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்கப்படவில்லை. என் பின்னால் நிற்கும் இளைஞர் பட்டாளத்தை, தொண்டர்களை எந்த அரசியல் கட்சியிடமும் அடகு வைக்க மாட்டேன்.
பல்வேறு கட்சிகளிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவற்றை எல்லாம் நான் ஏற்கவில்லை. டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்.
இருப்பினும் தீய எண்ணம் கொண்ட சிலர் என்னைப் பற்றி தவறான தகவல்களை கட்சித் தலைமைக்கு தெரிவித்து வருகிறார்கள். கட்சிக்காக கடுமையாக உழைத்த பலர், பல காலக் கட்டங்களில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். கட்சியின் வளர்ச்சிக்காக நான் தெரிவித்த பல்வேறு ஆலோசனையையும், சுட்டிக் காட்டிய தவறுகளையும் எனக்கு எதிராகச் சிலர் திருப்பி விட்டனர் என்றார் அவர்.
-
அரசியல் முட்டு சந்தில் ராமதாஸ்.. அதிமுகவுடன் கூட்டணியா? கேட்டை மூடிய எடப்பாடி.. அடிவருடிகள் அப்செட்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications