கடிதத்தை வெளியிட்டதால் தனது இணையதள நிர்வாகியை விரட்டிய ஹஸாரே!

இதனால் கோபமடைந்த அந்த பத்திரிகையாளர், "ஹஸாரே தெரிந்தே பொய் சொல்வதாகவும், கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரிவால், சிசோதியா ஆகியோரின் சுயநலத்துக்காக, அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுப்பதாகவும்," சாடியுள்ளார் அந்த பத்திரிகையாளர்.
உண்ணாவிரதம் மூலம் பிரபலமான அன்னா ஹஸாரேவுக்கு, பேஸ்புக், வலைப்பூ, ட்விட்டர் என சமூக இணையதளங்கள் மூலம் பெரிய அளவு பப்ளிசிட்டி தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது மாட்டியவர்தான் ராஜூ பாருலேகர்.
டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் இவர். இவரது வசம்தான் அன்னா ஹஸாரேயின் இணையதளம் ஒப்படைக்கப்பட்டது. அன்னாஹஸாரேஸ்பீக்ஸ் என்ற பெயரில் ஒரு வலைப்பூ மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தை நடத்தி வந்தவர் இவரே.
ஹஸாரேவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். ஹஸாரே என்ன சொல்கிறாரோ, எழுதித் தருகிறாரோ அதைப் பதிவு செய்வது இவர் வேலை.
ஆனால் சமீபத்தில் இவரை அந்த வேலையிலிருந்து தூக்கிவிட்டார் ஹஸாரே. காரணம் இதுதான்:
அன்னா ஹஸாரே எழுதிய ஒரு கடிதத்தை இந்த ராஜூ பாருலேகர் வெளியிட்டுவிட்டார். அதில் ஹஸாரேவின் இரட்டை நிலைப்பாடு வெளியில் தெரிந்துவிட்டது.
மவுன விரதமிருந்தபோது எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில், "இப்போதுள்ள டீம் அன்னா குழுவை உடனடியாக கலைத்துவிட்டு, மறு சீரமைப்பு செய்யப் போகிறேன். ஊழலை ஒழிக்கும் விருப்பத்துடன் கைகோர்க்க உள்ள பலருக்கும் இதில் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என விரும்புகிறேன். இப்போதுள்ள குழுவை கலைத்து புதிய செயற்குழுவை உருவாக்க வேண்டும்," என்று எழுதி, உடனடியாக அதை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டாராம் ஹஸாரே.
ஆனால் மவுன விரதம் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய ஹஸாரே, டீம் அன்னாவைக் கலைக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. இந்த குழு சிறப்பாக இயங்குகிறது, என்று கூறியிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாருலேகர், தன் கைவசமிருந்த அன்னா ஹஸாரேயின் கடிதத்தை இணையதளத்தில் வெளியிட்டுவிட்டார்.
ஹஸாரே கைப்பட எழுதி கையெழுத்துப் போட்டுள்ள அந்தக் கடிதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதால், உடனே அந்த பத்திரிகையாளரை நீக்கிய ஹஸாரே, நான் அப்படியொரு கடிதத்தை எழுதவே இல்லை என்று மறுத்தார்.
ஆனால் பாருலேகர், "ஹஸாரே எதற்காக இப்படி பொய் சொல்கிறார். இதோ அந்தக் கடிதம். இந்தக் கையெழுத்து ஹஸாரேவுடையது. இதை எங்கு வேண்டுமானாலும் நான் நிரூபிப்பேன். இது ஒன்றே போதும், இந்த ஊழல் எதிர்ப்பு நாடகத்தின் சூத்திரதாரிகள் யார், அவர்கள் நோக்கமென்ன என்பதைப் புரிந்து கொள்ள.
கிரண் பேடி, கேஜ்ரிவால், சிசோதியா ஆகியோர் தங்கள் சுயநலத்துக்காக அன்னா ஹஸாரேவை பாதாளத்தை நோக்கி இழுத்துச் செல்கிறார்கள். அவரும் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் அல்ல இவர்கள் நோக்கம். ஊழல் எதிர்ப்பின் பெயரால், முழு அரசியல் செய்கிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக இந்த போராட்டத்தை ஹஸாரே அறிவித்ததால்தான் நான் இதில் இணைந்தேன். இனி இதிலிருப்பது கேலிக்குரியது," என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications