பிரஜா ராஜ்ஜியத்தைக் கலைத்து விட்டு காங்.கில் இணைந்த சிரஞ்சீவி அமைச்சராகிறார்

இந்தப் பதவிக்காகத்தான் இத்தனை நாட்களாக ஆவலுடன் காத்திருந்தார் சிரஞ்சீவி. இந்தப் பதவியே முன்பே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இடையில் தெலுங்கானா பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததாலும், சோனியாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதாலும் அவரால் மத்திய அமைச்சர் பதவியை உடனே அடைய முடியவில்லை.
இந்த நிலையில், தற்போது சிரஞ்சீவிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க சோனியா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிரஜா ராஜ்ஜியத்தைக் கலைத்து விட்டு காங்கிரஸில் சேர்ந்தபோது சோனியா காந்தி அப்போது டெல்லிலேயே இல்லை. மாறாக ராகுல் முன்னிலையில்தான் அவர் கட்சியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் முதல் முறையாக சோனியாவை நேற்று சந்தித்தார் சிரஞ்சீவி. காங்கிரஸில் சேர்ந்த பிறகு அவர் சோனியாவை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.
அப்போது உரிய கெளரவம் தரப்படும் என சிரஞ்சீவிக்கு உறுதியளித்தாராம் சோனியா. அவருக்கு விரைவில் மத்தியஇணை அமைச்சர் பதவி தரப்படும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதற்கு முன்பாக சிரஞ்சீவி எம்.பியாக வேண்டும். ராஜ்யசபா மூலமாகவோ அல்லது லோக்சபா எம்பியாகவோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியும். இதற்காக அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் சிரஞ்சீவியை நிற்க வைக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அப்போது 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ராஜ்யசபா தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே சிரஞ்சீவி அமைசச்ராகி விடுவார் என்று கூறப்படுகிறது. அமைச்சரான பின்னர் அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவாராம்.
அனேகமாக அடுதத மாத வாக்கில் சிரஞ்சீவி அமைச்சராக்கப்படலாம் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாத வாக்கில் உ.பியில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்குள்ளாக சிரஞ்சீவி விவகாரத்தை முடித்து விட காங்கிரஸ் தலைமை தீர்மானித்துள்ளது.
நேற்று சோனியாவை சந்தித்த பின்னர் வெளியே வந்த சிரஞ்சீவி படு உற்சாகமாக காணப்பட்டார். அவர் கூறுகையில், எனக்கு உரிய கெளரவம் அளிக்கப்படும் என்று மேடம் உறுதியளித்துள்ளார். மேலும் எனது கட்சியிலிருந்து காங்கிரஸில் இணைந்த எம்.எல்.ஏக்களுக்கும், பிற தலைவர்களுக்கும் கூட உரிய மரியாதை தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications