போளூரில் சமையல் கேஸ் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது
திருவண்ணாமலை: போளூரில் சமையல் கேஸ் கேட்டு திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஒரு தனியார் கேஸ் ஏஜென்சி உள்ளது. இந்த ஏஜென்ஸி போளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்களை அனுப்பி வருகிறது.
கடந்த இரண்டு மாதமாக சிலிண்டர் கேட்டு பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு மேல் ஆகியும் சிலிண்டர் வழங்கவில்லை.
இதனால் பொது மக்களை அந்த ஏஜென்சியை தொடர்பு கொண்டு கேட்ட போது, சென்னையில் உள்ள அலுவலகத்தில் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறுவதால், இங்கு சப்ளை செய்யப்படவில்லை என்று காரணம் கூறினர்.தற்போது வேலை நிறுத்தம் முடிந்துவிட்ட நிலையிலும் பல்வேறு காரணங்களை கூறி கேஸ் சிலிண்டர்கள் வழங்காமலேயே இருந்துள்ளனர். மேலும் சிலிண்டர்களை நிர்ணயிக்கப்பட்ட விலைவிட ரூ. 50 முதல் ரூ. 150 வரை அதிகமாக விற்பனை செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த ஏஜென்சி அலுவலகத்துக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை 11 மணி அளவில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் போளூர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
அவர்களை போளூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் உடனே திருவண்ணாமலை-வேலூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் பொது மக்கள் கலைந்து செல்லாததால் 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பபடுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications