என் நிலத்தை அபகரிச்சுட்டாங்கோ சாமீ!: திமுக நிர்வாகி மீது நரிக்குறவர் புகார்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே உள்ள ரூபநாராயணநல்லூரைச் சேர்ந்த நரிக்குறவர் ஒருவர் தனக்கு அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை திமுக பிரமுகர் ராமசாமி என்பவர் அபகிரித்துக் கொண்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ரூபநாராயணநல்லூரில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 42 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் 10 குடும்பத்திற்கு கடந்த 1987ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி தமிழக அரசு இலவச மனைப்பட்டா வழங்கியது.
அதில் அப்பகுதியைச் சேர்ந்த குறவன் நலமுன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் பாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு 1.83 ஏக்கர் நிலத்திற்கு இலவசமாக பட்டா வழங்கப்பட்டது.
அந்த நிலத்தில் பாஸ்கரும், அவரது மனைவியும் விவசாயம் செய்து வந்தனர். கடந்த 1992ம் ஆண்டு கம்மாபுரத்தைச் சேர்ந்த தற்போதைய கம்மாபுரம் திமுக ஒன்றிய தலைவரும், கம்மாபுரம் ஊராட்சித் தலைவருமான ராமசாமியிடம் ரூ.12,000க்கு 3 ஆண்டுகளுக்கு நிலத்தை குத்தகைக்கு விட்டார்.
குத்தகைக்கு எடுத்த நிலத்தை ராமசாமி அபகரித்துக் கொண்டதாக பாஸ்கர் கடலூர் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு மீட்புக் குழு இன்ஸ்பெக்டர் ரவீந்திரனிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ராமசாமி தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications