கொல்லப்பட்டார் மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி!

கொல்கத்தாவிலிருந்து ஒளிபரப்பாகும் டிவி சேனல்கள் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளன. ஜார்கிராம் அருகே உள்ள குஷ்பானி வனப்பகுதியில் நடந்த சண்டையின்போது கிஷன்ஜி சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கூட்டுப் படையினர் இங்கு கிஷன்ஜி உள்ளிட்ட மாவோயிஸ்டுகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் இறங்கியதாகவும், அதில் கிஷன்ஜி கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டைக்குப் பின்னர் அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்தபோது கிஷன்ஜியின் உடலையும், அவருக்கு அருகே ஒரு ஏ.கே. 47 துப்பாக்கி இருந்ததையும் பாதுகாப்புப் படையினர் கண்டு மீட்டுள்ளனர். இந்த சண்டையில் கிஷன்ஜி தவிர மேலும் 3 மாவோயிஸ்ட்களும் கொல்லப்பட்டனர்.
இந்த சண்டையின்போது கிஷன்யின் நெருங்கிய உதவியாளரான சுசித்ரா மகதோவும் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் அதே பகுதியில்தான் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுசித்ராவை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிஷன்ஜி சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து மேற்கு வங்க மாநில அரசுத் தரப்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனேகமாக கண்டெடுக்கப்பட்ட உடல் கிஷன்ஜியினுடையதாக இருக்கும் என்றார்.
2 ஆண்டுகளுக்கு முன்பும் கூட இதேபோலத்தான் கிஷன்ஜி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது தவறு என்பது பின்னர் தெரிய வந்தது.
ஒருவேளை தற்போது இறந்திருப்பது கிஷன்ஜிதான் என்பது உறுதியானால் அது மாவோயிஸ்ட்களுக்கு மிகப் பெரிய பின்னடைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிஷன்ஜிதான் மாவோயிஸ்ட்களின் மூளையாக, பலமாக திகழ்ந்து வருகிறார். அவர் வகுத்துத் தரும் உத்திகளைத்தான் சமீப காலமாக மாவோயிஸ்ட்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். கடந்த கால கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது மேற்கு வங்கத்தை கடுமையாக ஆட்டிப்படைத்தனர் மாவோயிஸ்ட்கள் என்பது நினைவிருக்கலாம்.
அப்போது கிட்டத்தட்ட மாவோயிஸ்ட்களுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்து வந்தார் மமதா பானர்ஜி. ஆனால் தற்போது அவர் ஆட்சிக்கு வந்ததும் மாவோயிஸ்டகளுக்கு எதிரான நிலையை எடுத்துள்ளார். தனது கட்சியைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட்கள் கொன்றதால் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில்தான் கிஷன்ஜி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிஷன்ஜி கொல்லப்பட்டிருந்தால் அது மேற்கு வங்க அரசுக்கு பெரும் சாதகமானதாக அமையும். அதேநேரத்தில், மாவோயிஸ்ட்கள் முழு வீச்சில் தாக்குதலில் இறங்கக் கூடும் என்ற அபாயமும் காத்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் தஙக்ளது கோபத்தைக் காட்ட முடியாமல் போனாலும் கூட ஜார்க்கண்ட் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அவர்கள் ஆவேசத் தாக்குதலில் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications