மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஆதரவான தீர்ப்பு- எதிர்த்து தமிழக அரசு அப்பீல்!
சென்னை: மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் என்ற தனி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது தமிழக அரசு. இந்த உத்தரவை எதிர்த்து பணியாளர் சங்கங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தன. அதைத் தொடர்ந்து அரசு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி கே.சுகுணா உத்தரவிட்டார்.
சங்க உறுப்பினர்களுக்கு உடனடியாக பணி வழங்குவதோடு, அது தொடர்பான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதியைக் கொண்ட டிவிஷன் பெஞ்சில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த டிவிஷன் பெஞ்ச், மக்கள் நலப் பணியாளர்கள் சங்கங்களின் வழக்கின் இறுதி விசாரணையை 24-ந் தேதி நடத்த வேண்டும் என்று தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
பணி நியமன உத்தரவு
அதைத் தொடர்ந்து புதன்கிழமை நீதிபதி கே.சுகுணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கியதற்கான அறிக்கை பற்றி நீதிபதி கேட்டார். இதுதொடர்பாக அரசின் கருத்தை அறிந்து பதில் தெரிவிக்க ஒரு நாள் கால அவகாசம் வேண்டுமென்று தமிழக அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதிட்டார். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை 24-ந் தேதிக்கு நீதிபதி கே.சுகுணா தள்ளி வைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அட்வகேட் ஜெனரல், அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்ய உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்' என்று வாதிட்டார்.
சங்கங்களின் தரப்பில் வாதிட்ட வக்கீல் வைகை, அதற்கும் இந்த கோர்ட்டில் நடக்கும் விசாரணைக்கும் சம்பந்தமில்லை. இறுதி விசாரணையை 24-ந் தேதி நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு தடையில்லை என்பதால், இறுதி விவாதம் நடத்தலாம்' என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் இறுதி விவாதம் நேற்று தொடங்கியது. இறுதி விவாதத்தை வக்கீல் வைகை தொடங்கினார். விவாதம் முடிவுராத நிலையில், அடுத்த கட்ட விசாரணையை 29-ந் தேதிக்கு நீதிபதி கே.சுகுணா தள்ளிவைத்தார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications