சபரிமலைக்கு செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரள போலீசார் பாதுகாப்பு
பாலக்காடு: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கேரள போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள், வர்த்தக நிறுவனங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. அதேபோல கேரளாவிலும் தமிழர்களின் மீது தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களின் மீதும் கேரளாவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து தமிழக பத்திரிக்கைகளில் கண்டன செய்திகள் வெளியாகின.
இதற்கிடையே நேற்று தமிழக, கேரள எல்லைப் பகுதியான வாளையாரில் ஐயப்ப பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேரம் நடந்த இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கேரள போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சபரிமலைக்கு செல்லும் தங்களை மலையாளிகள் தாக்குவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவதாக கேரள போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
தமிழக ஐயப்ப பக்தர்களின் மீது இரு மாநில எல்லைப் பகுதிகளில் அதிகளவில் தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே தமிழகத்தில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களை வாளையாரில் இருந்து திருச்சூர் மாவட்டம் வரை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்ல கேரள போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அதேபோல சபரிமலையில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களை திருச்சூரில் இருந்து பாதுகாப்பாக தமிழக எல்லை வரை கொண்டு வந்து விடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications