முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக நிபுணர் குழு கூறுவதை ஏற்க மாட்டோம்-கேரளா
சென்னை: முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று மத்திய நிபுணர் குழு கூறுவதை ஏற்க மாட்டோம் என்று கேரள மாநில மீன்வளத்துறை அமைச்சர் பாபு சென்னையில் கூறியுள்ளார்.
கேரள மாநில மீன் வளத்துறை சார்பில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய சர்வதேச மீன்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 2002-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த கண்காட்சி, அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 5 நாட்கள், கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து நேற்று சென்னைக்கு வந்த பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர எங்கள் அரசு தயாராக இருக்கிறது. ஆனால், எங்களது பாதுகாப்பு முக்கியம். முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இருக்கிறது. பழைய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டதால், அணை பலகீனமாக உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் உடைப்பு ஏற்பட்டால், கேரளாவில் 6 மாவட்டத்தில் உள்ள 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண கேரள அரசு விரும்புகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வெளியேயும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண முயற்சி எடுத்து வருகிறோம்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்ற மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று கேரள அட்வகேட் ஜெனரல் ஊடகங்கள் மத்தியில் கூறியது தவறான தகவல் ஆகும் என்றார் அவர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications