மீடியா மூலம் பேசாதீர்கள், எங்களிடம் நேரடியாக பேசுங்கள்-மாதவன் நாயர்
பெங்களூர்: எங்களுடன் மத்திய அரசு பேச வேண்டும் என்று விரும்பினால் நேரடியாக எங்களுடன் பேசலாம். அதை விடுத்து மீடியாக்கள் மூலம் பேசுவது சரியல்ல என்று அரசுப் பணியில் சேர தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.
ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக சமீ்பத்தில் மாதவன் நாயர் உள்ளிட்ட நான்கு விஞ்ஞானிகள் அரசுப் பணியில் சேர தடை விதித்தது மத்திய அரசு. இதற்கு மாதவன் நாயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவராக இருக்கும் ராதாகிருஷ்ணன்தான் இதன் பின்னணியில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், மாதவன் நாயர் உள்ளிட்டோருடன் பேச அரசு தயார் என மத்திய அமைச்சர் நாராயணசாமி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இதுகுறித்து மாதவன் நாயர் கூறுகையில், எங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மேலும் இதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும்.
நிச்சயமாக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.எங்களிடம் அல்ல, இந்த நாட்டிடம். சிலர் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் நாட்டின் முன்பு மன்னிப்பு கேட்டாக வேண்டும்.
இந்த விஷயத்தில் அரசு உண்மையான அக்கறையுடன் இருக்குமானால் இந்த உத்தரவைத் திரும்பப் பெற அது உத்தரவிட வேண்டும்.
இந்த அரசு என்னுடனோ மற்ற மூன்று பேருடனோ பேச விரும்பினால் நேரடியாகத்தான் அணுக வேண்டும். அதை விட்டு விட்டு மீடியாக்கள் மூலமாக பேசக் கூடாது. இது எங்களது கெளரவம், நேர்மை சம்பந்தப்பட்டது.
நாராயணசாமி பேசி வருவது எங்களுக்குப் புரியவில்லை.அவர் ஏன் இப்படிப் பேசுகிறார் என்பதும் தெரியவில்லை. எங்களது கருத்துக்களை அரசு நேரடியாக கேட்டால் நாங்கள் எப்போதும் அதைக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்.
எங்களைத் தடை செய்தது தொடர்பான உத்தரவு இதுவரை எங்களுக்கு வரவில்லை. ஏன் ஒரு தகவல் தொடர்பு கூட இல்லை. மீடியா மூலம்தான் எல்லாம் வருகிறது. நாங்கள் இந்தியாவில்தான் வசிக்கிறோம், இங்குதான் வாழ்கிறோம்.எங்களுக்கு மொபைல் போன் உள்ளது, இமெயில் முகவரி உள்ளது. தபால் முகவரி உள்ளது. எல்லாமும் உள்ளது. ஆனால் இதுவரை ஒரு தகவல் தொடர்பு கூட இல்லை.
நாங்கள் விமானத்தைக் கடத்தவில்லை. நாங்கள் கடத்தல்காரர்கள் இல்லை, தீவிரவாதிகள் இல்லை. பிறகு ஏன் எங்கள இப்படி நடத்துகிறார்கள். உண்மை வெளிவர வேண்டும் என்றார் அவர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications