நடராஜன், பாஸ்கரன் மீதான வெளிநாட்டுக் கார் வழக்கு..10 ஆண்டுக்குப் பின் மீண்டும் விசாரணை
சென்னை: வெளிநாட்டுக் காரை இறக்குமதி செய்ததில் உரிய வரிகளைக் கட்டாமல் மோசடி செய்தது தொடர்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் அக்காள் மகன் பாஸ்கரன் ஆகியோர் மீதான வழக்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட் விசாரணைக்கு எடுத்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு, அதிமுக ஆட்சி நடந்து வந்து கொண்டிருந்தபோது நடராஜனும், பாஸ்கரனும் இணைந்து ஒரு வெளிநாட்டு ஆடம்பரக் காரை வாங்கி சென்னைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் இந்த கார் இறக்குமதிக்கு முறையாக அவர்கள் வரி கட்டாமல் ஏய்த்து விட்டனர். இதையடுத்து மத்திய அமலாக்கப் பிரிவு, சென்னை பொருளாதார கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. ஆனால் அந்தவழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மூலம் நடராஜனும், பாஸ்கரனும் தடை வாங்கி விட்டனர். இதனால் கடந்த 10 வருடமாக அது கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தது.
தற்போதுதான் சசிகலா முகாமுக்கு கெட்ட காலம் பிறந்துள்ளதே..இதன் எதிரொலியாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்குக்கு தற்போது திடீரென உயிர் கொடுத்துள்ளனர். சமீபத்தில் விசாரணைக்கான தடை நீங்கியது. இதையடுத்து நேற்று விசாரணை தொடங்கியது. அப்போது அரசுத்தரப்பு சாட்சி ஜானகிராமன் என்பவர் மட்டுமே ஆஜராகியிருந்தார். நடராஜனும் வரவில்லை, பாஸ்கரனும் வரவில்லை. இதனால் விழக்கு விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு மாஜிஸ்திரேட்தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications