இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் படுகொலை
ஜெருசலேம்: காஸா பகுதியில், இஸ்ரேலியர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பாலஸ்தீனத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினருக்கும், ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் ஏற்பட்ட வன்முறையின்போது திடீரென விமானப்படைத் தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல்.
இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் முதலில் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த உயிர்ப்பலி 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கூறுகையில், காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள், வெள்ளிக்கிழமை முதல் 90 ராக்கெட்களை வீசித் தாக்கினர். இதில் எட்டு பேர் காயமடைந்தனர். இதையடுத்தே விமானத் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications