நாளை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் இடிந்தகரை
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடிய 178 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள் என்றும், இடிந்தகரையில் கடைகள் திறக்கப்படும் என்றும், குழந்தைகள் பள்ளிக்கு செல்வார்கள் என்றும் போராட்டகுழு அறிவித்துள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளை செயல்படுத்தலாம் என தமிழக அரசு கடந்த மாதம் 19ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அன்றே அணு மி்ன் நிலைய அதிகாரிகள் பணிக்கு சென்று வேலையைத் துவங்கினர்.
இதை கண்டித்து இடிந்தகரையில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் கடந்த 19ம் தேதி முதல் நெல்லை மாவட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இடிந்தகரையில் கடைகள் அடைக்கப்பட்டன. குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவில்லை.
ராதாபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் போராட்டக் குழுவைச் சேர்ந்த 10 பேருடன் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி. வரதராஜு, எஸ்.பி. விஜயேந்திர பிதாரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து ராதாபுரத்தில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது. மேலும் உதயகுமார் உள்பட 15 பேரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். எனினும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுவித்த பின்னரே மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள் என போராட்டக்குழு தெரிவித்தது.
இந்நிலையில் போராட்டக்குழுவைச் சேர்ந்த 178 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
அதற்கு பின்னர் போராட்டக்குழுவில் ஒருவரான புஷ்பராயன் கூறுகையில்,
அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடி சிறையில் உள்ளவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை (2ம் தேதி) முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இடிந்தகரை, கூடங்குளத்தில் கடைகள் திறந்திருக்கும். இடிந்தகரையில் உள்ள குழந்தைகள் நாளை முதல் பள்ளிக்கு அனுப்பப்படுவர். எனினும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications