தேமுதிக பெற்ற டெபாசிட்: சிக்கலில் அமைச்சர் முகமது ஜான்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும், அதிமுகவை எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார்.
இதனால் புதுக்கோட்டையில் அதிமுக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட 32 அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அடங்கிய தேர்தல் பணிக்குழு தொகுதியில் முகாமிட்டு இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்தனர். வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக 1,01,998 வாக்குகளும், தேமுதிக 30,500 வாக்குகளும் பெற்றது.
புதுக்கோட்டை நகரத்தில் உள்ள கலீப் பகுதியின் 89வது வார்டு மற்றும் 91, 92 (எம்) ஆகிய மூன்று வாக்குச்சாவடியில் 1,504 வாக்குகள் பதிவானது. இதில் அதிமுகவுக்கு 606 வாக்குகளும், தேமுதிகவிற்கு 823 வாக்குகளும் கிடைத்தது.
இந்த மூன்று வாக்குச்சாவடிகளில் அதிமுகவை விட தேமுதிக அதிக வாக்குகள் பெற்றதற்காக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையிலான நிர்வாகிகளைப் பாராட்டிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் 3 ஒன்றியச் செயலாளர்களுக்கு தலா அரை பவுன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்.
இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், இந்த மூன்று வாக்குச்சாவடிகளுக்கும் அதிமுக சார்பில் தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகமது ஜானும், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தமிழ் மகன் உசேனும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த வாக்குச்சாவடிகளில் அதிமுகவை தேமுதிக பின்னுக்கு தள்ளியதால் அமைச்சர் முகமது ஜானுக்கும், தமிழ் மகன் உசேனுக்கும் அரசியல் ரீதியாக சிக்கல் உள்ளதாக அரசியல் வட்டராத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications