For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசுத் தலைவர் தேர்தல்: மமதாவுடன் ராசியாக காங்கிரஸ் முடிவு- கபில் சிபல் நேரில் சந்திப்பு

By Mathi
Google Oneindia Tamil News

 Kapil Sibal
கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்வு விவகாரத்திலேயே காங்கிரஸுடன் கடுமையான மோதலை உருவாக்கிக் கொண்ட மமதாவுடன் ராசியாகிவிடுவது என காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்திருக்கிறது போல் தெரிகிறது. கொல்கத்தாவில் மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான கபில்சிபல் இன்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கபில்சிபல், மமதாவுடன் எப்பொழுது உரையாடினாலும் அது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அதுதான் இன்றைய சந்திப்பிலும் நடந்தது என்று மட்டும் கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மமதா பானர்ஜி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியையே ஆதரிக்க வேண்டும் என்று மேற்கு வங்க காங்கிரஸ் பொறுபாளர் ஷகீல் அகமது நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கபில்சிபலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வரும் 19-ந் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு தங்களது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்போம் என்று மமதா பானர்ஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Apparently in a bid to bring Trinamool Congress, a key UPA ally, on board on the Presidential poll issue, Congress leader and Union Minister Kapil Sibal on Thursday met the party chief Mamata Banerjee here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X