லண்டனில் புர்கா அணிந்த கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டு, தீவிரவாதி என்ற பிரபல பெண் போட்டோகிராபர்
லண்டன்: இங்கிலாந்தில் பிரபல புகைப்பட கலைஞர் சின்னமன் ஹீத்கோட் டிரரி புர்கா அணிந்த 6 மாத கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டதுடன், அவரை தீவிரவாதி என்று அழைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் சின்னமன் ஹீத்கோட் டிரரி(41). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி அவர் மேற்கு லண்டன், கென்சிங்டன் பகுதியில் உள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு அவர் புர்கா அணிந்த மௌனியா ஹமௌமி என்ற 6 மாத கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டதாகவும், அவரை தீவிரவாதி என்றும், அவரது குடும்பத்தாரை தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் என்று கூறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணைக்காக ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜரான டிரரி கூறுகையில்,
டெஸ்கோ கடையில் மௌனியா ஹமௌமி மற்றும் அவரது கணவர் வாங்கிய பொருட்களை டிராலியில் இருந்து வாகனத்திற்கு எடுத்துச் செல்ல உதவ முன்வந்தேன். ஆனால் அவரது கணவர் எனது உதவியை ஏற்க மறுத்தார். மேலும் அந்த பெண் தான் என்னைத் திட்டி தாக்கினார். நான் அவர்களை எதுவும் சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லை என்றார்.
அதற்கு நீதிமன்றம், நீங்கள் கணவன் மனைவி பேசியதை ஒட்டுக் கேட்டுள்ளீர்கள். உங்கள் உதவியை ஏற்க அவர்கள் மறுத்தவுடன் நீங்கள் அவர்களைத் திட்டியுள்ளீர்கள். மேலும் அந்த கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டு அவரை தீவிரவாதி என்றும், அவரது குடும்பத்தாரை தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் என்றும் கூறியுள்ளீர்கள். இது தவிர நான் இங்கிலாந்து குடிமகள். நீங்கள் எல்லாம் எங்கிருந்து வந்தீர்கள் என்று கேட்டுள்ளீர்கள் என்று தெரிவித்தது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications