பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றவர் தடகள வீராங்கனை பிங்கி. இவர் மீது சமீபத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரப் புகார் கொடுத்தார். அதில், தானும் பிங்கியும் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும், பிங்கி ஒரு ஆண் என்றும், தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும், அவர் தன்னை திருமணம் செய்ய மறுத்து மோசடி செய்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
பெரும் பரபரப்பைக் கிளப்பிய இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் பிங்கியைக் கைது செய்தனர். நேற்றுதான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் டிஎன்ஏ சோதனையும் ஒன்று. இதில்தான் ஒருவரை ஆணா, இல்லை பெண்ணா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என்பதால் இந்த சோதனையை நடத்தினர். தற்போது இந்தசோதனை முடிவு வந்து விட்டதாம்.
அதில், பிங்கி ஒரு ஆண் என்றும், அவருக்கு ஆண் குரோமோசோமே இருப்பதாகவும் அதாவது அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அறிக்கை விரைவில் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
(பெண்களில் XX குரோமோசோம் இருக்கும். ஆண்களில் XY குரோமோசோம் இருக்கும்)
இந்த மருத்துவப் பரிசோதனையை கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே. எம். மருத்துவமனை டாக்டர்கள் மேற்கொகண்டனர். தற்போது இந்த அறிக்கை வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள பராசத் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்னும் ஒரு நாளில் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளதாம்.












Click it and Unblock the Notifications