தமிழக மீனவர்கள் மீது தவறில்லை, அமெரிக்கா சுட்டதுதான் தவறு- துபாய் போலீஸ் தலைவர்

துபாய் அருகே தமிழக மீனவர்கள் அடங்கிய மீன் பிடி படகை எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் செய்யாமல் அமெரிக்கக் கடற்படையினர் சுட்டுள்ளனர். இதில் சேகர் என்ற மீனவர் கொல்லப்பட்டார். மூன்று மீனவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீனவர்களின் படகு தங்களை நோக்கி வேகமாக வந்ததாகவும், இதனால் முன்னெச்சரிக்கை செய்ததாகவும், அதையும் மீறி வந்ததால்தான் சுட்டதாகவும் அமெரிக்கக் கடற்படை விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று துபாய் போலீஸ் துறை தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் தஹி கல்பான் தமீம் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆரம்பகட்ட விசாரணையில், இந்திய மீனவர்கள் சென்ற படகு எந்த வகையிலும் யாருக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் சரியான திசையில்தான் போயுள்ளனர். அவர்கள் மீது அமெரிக்கக் கடற்படையினர் சுட்டதில்தான் தவறு இருப்பதாக தெரிய வந்துள்ளது என்றார்.
துபாய் போலீஸ் துறை தலைவரின் இந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்கக் கடற்படையினர் பொய் சொல்லுவதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது. இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு தவறு செய்த அமெரிக்கக் கடற்படையினர் மீது சர்வதேச மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்திய அரசு தீவிரமாக செயல்படுமா என்பதுதான் தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications