ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கொடுத்த ரூ.500க்காக சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசிய 2 சிறுவர்கள்
ஸ்ரீநகர்: தீவிரவாத தாக்குதல்கள் நடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சிறார்களை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சொபோர் நகரத்தில் உள்ள சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2ம் தேதி நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்பவர்களின் பிள்ளைகள். லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஒருவன் தள்ளு வண்டியில் காய்கறி விற்றுக் கொண்டிருந்த 12 மற்றும் 13 வயது சிறுவர்களை அணுகி போலீஸ் சோதனைச் சாவடியின் மீது வெடிகுண்டை வீசினால் ரூ.500 தருவேன் என்று ஆசை காட்டியுள்ளான்.
வறுமையில் வாடும் அவர்களுக்கு ரூ.500ஐ கண்டதும் அதை வேண்டாம் என்று சொல்ல மனமில்லை. அதனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலையை கச்சிதமாக முடித்தனர். ஆனால் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அந்த 2 சிறுவர்களும் சிக்கினர். கைது செய்யப்பட்ட அந்த இருவரும் பள்ளிக்கூடம் பக்கமே செல்லாதவர்கள். லஷ்கர் இ தொய்பா சிறுவர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இது குறித்து சொபோர் எஸ்.பி. இம்தியாஸ் அகமது கூறுகையில்,
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களை பணத்தைக் காட்டி தங்கள் பக்கம் இழுப்பது சுலபம். தற்போது வெடிகுண்டு வீசியவர்கள் தவிர கல்வீச்சு நடத்தவும் தீவிரவாதிகள் சில சிறுவர்களை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. அவர்கள் பணத்திற்காக தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளும்படி நேரலாம் என்றார்.
குண்டு வீச்சு வழக்கில் கைதான சிறுவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சொபோர் பகுதியில் மட்டும் சுமார் 2,000 சிறுவர்களை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த பயன்படுத்தி வருவதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவி்த்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications