பயன்படுத்தப்படாமல் வெயில், மழையில் அடிபடும் 40 புதிய பேருந்துகள்
நெல்லை: வழித்தடங்களில் போதிய பேருந்துகள் இல்லாத நிலையில் கேடிசி நகர் பனிமனையில் 40 புதிய அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டுள்ள இவை வெயிலில் காய்ந்து மழையில் நனைவதால் உதிரிபாகங்கள் பாழாகும் நிலை உள்ளது.
நெல்லை அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில் நெல்லை, நாகர்கோவில் மண்டலம் மூலம் நகரம் மற்றும் நெடுந்தூரங்களுக்கு சுமார் 1,953 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல ஆண்டுகள் ஓடிய பழைய பேருந்துகளுக்கு பதிலாக 266 புதிய பேருந்துகள் நெல்லை கோட்டத்திற்கு இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நெல்லை மண்டலத்திற்கு 150 பேருந்துகள், நாகர்கோவில் மண்டலதுக்கு 116 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டன.
நெல்லை மண்டலத்துக்காக வழங்கப்பட்ட 150 பேருந்துகளில் பாளை மார்க்கெட் பகுதியில் உள்ள கூ்ண்டு கட்டும் பிரிவில் 40 பேருந்துகளுக்கு கூண்டு கட்டப்பட்டு இயக்க தயாராக கேடிசி நகர் பனிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை தென்காசி-நாகர்கோவில், செங்கோட்டை-இராமநாதபுரம், தென்காசி-உடன்குடி, தூத்துக்குடி-திண்டுக்கல், பாபநாசம்-நெல்லை, நெல்லை-தூத்துக்குடி இடையே இயக்க வழித்தடங்களும் குறிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை இயக்கப்படாமல் கடந்த ஒன்றரை மாதமாக வெட்ட வெளியில் நிற்பதால் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து உதிரி பாகங்கள் வீணாகி வருகின்றன. எனவே, அரசு இவற்றை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications